செருப்படி வாங்கிய புளு சட்டை மாறன்… பார்த்திபன் இப்படி செய்யலாமா.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன், புதியதாக வெளியாகும் அணைத்து படங்களையும் கிண்டல் செய்து, படம் மிக மொக்கையாக இருப்பது போன்று விமர்சனம் செய்து வருகின்றவர் புளு சட்டை மாறன். தமிழ் சினிமாவில் புதியதாக திரைக்கு வரும் பெரும்பாலான படங்கள் இவருடைய பார்வையில் நன்றாக இல்லை என்றே விமர்சனம் செய்து வருகின்றவர். படத்தை மட்டும் விமர்சனம் செய்யாமல் அதை தாண்டி படத்தில் நடிக்கும் நடிகர்களை தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்வார்.

விவேகம் படம் வெளியான போது, அஜித் – காஜல் அகர்வால் வரும் காட்சிகள் அப்பா- மகள் காட்சி போன்று இருப்பதாக விமர்சனம் செய்தார். வலிமை படத்தில் அஜித்துக்கு கன்னத்தில் தொப்பை விழுந்துள்ளது. மேலும் அவர் நடனம் மாவு ஆட்டுவது போன்று உள்ளது என கேலி செய்து அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையினர் மத்தியிலும் கடும் எதிர்ப்புக்கு உள்ளானார், இதே போன்று நடிகர் விஜய்யையும் கடுமையாக கேலி கிண்டல் செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் இரவின் நிழல், இந்த படம் தற்பொழுது திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. பார்த்திபன் படைப்புகள் அனைத்தும் மற்ற படங்களை விட சற்று விதியசமாக இருக்கும் அந்த வகையில் இதற்கு முன்பு பார்த்திபன் படைப்பில் வெளியான ஒற்றை செருப்பு படம் போன்று சற்று விதியசமாக எடுக்கப்பட்டுள்ளது இரவின் நிழல்.

இந்த படம் சிங்கில் சாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்கிற சாதனையும் படைத்துள்ளது. இப்படி எடுக்கப்படுவது இது தான் தமிழ் சினிமாவில் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தை புளு சட்டை மாறன் வழக்கம் போல் கேலி கிண்டலுடன் விமர்சனம் செய்ய, அது பார்த்திபன் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மிக கடினமான உழைப்பில் ஒரு படைப்பை உருவாக்கிய பார்த்திபனையும் வருத்தம் அடைய செய்துள்ளது.

இரவின் நிழல் படத்தை கான புதுசேரி சென்றுள்ளார் பார்த்திபன், அங்கே அவரது ரசிகர்கள் புளு சட்டை மாறன் புகைப்படத்துக்கு சாணியை கரைத்து ஊற்றி, செருப்பு மாலை அணிவித்தும், மற்றும் புளு சட்டை மாறன் புகைப்படத்தை செருப்பால் அடித்தும் அவர்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர். ஒரு விமர்சகரை தனது ரசிர்கள் இது போன்று செய்வதை பார்த்திபன் தடுத்திருக்க வேண்டும் என்கிற விமர்சனமும் சினிமா துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை செய்தியாளர் சந்திப்பின் போது சேரி பிஹேவ்ய்ர் என்று பேசியது பெரும் சர்ச்சையாக விடுத்துள்ளது. இப்படி ப்ளூ சட்டை மாறன் தொடங்கி, படத்தில் இடம்பெற்ற நிர்வாண காட்சிகள், தற்பொழுது படத்தில் நடித்த நடிகையின் சர்ச்சை பேச்சு என தொடர்ந்து இரவின் நிழல் படத்திற்கு விளம்பரம் தேடி தந்து வருவது குறிப்பிடதக்கது.

தமிழ் நடிகரால் தெருவுக்கு வந்த லிங்குசாமி.. தெலுங்கு நடிகரால் தலைமிர்ந்தது எப்படி தெரியுமா.?