வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்த சுசித்ரா… பரபரப்பை கிளப்பிய சினிமா பிரபலம்… யாருடன் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : திரைத்துறையில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் ரகசியங்களை தனியார் செய்தி சேனல் அல்லது யூட்யூப் மூலம் தமிழ் திரை நட்சத்திரங்களின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை பற்றி பேசி வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் பாடகி சுசித்ரா பற்றி அவர் பேசியிருந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பயில்வான் ரங்கநாதன் பல நடிகைகளை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிடுவதாக நடிகைகள் சிலர் குற்றசாட்டை முன்வைத்து வருகின்ற வேளையில் பாடகி சுசித்ரா தன்னைப்பற்றிய பொய்யான அவதூறான கருத்துக்களை கூறியதாக பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் யூட்யூப் சேனலில் இன்று திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் பலர் தயாரிப்பாளர்கள் ஹீரோக்கள் என பலருடன் படுக்கையை பகிர்ந்துகொண்ட பின்னரே படவாய்ப்புக்களை பெற்றனர் என அப்பட்டமாக பேசி தனது வீடியோக்களை ஹிட்டடித்து வருகிறார், இவர்மீது எந்த ஒரு நடிகரோ அல்லது நடிகையோ இதுவரை புகார் அளிக்காத நிலையில் பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.

மேலும் சின்னத்திரை நடிகை ஆலியா மானசா மற்றும் பிக்பாஸ் ஓவியா ஆகியோர் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பாடகி சுசித்ரா பற்றி படுமோசமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே சுசித்ரா புகாரளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பயில்வான் ரங்கநாதன் சேனலில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அதில் “பாடகி சுசித்ரா போதைக்கு அடிமையானவர். திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக்களை பெறுவதற்காக சில பிரபலங்களுடன் படுக்கையை பகிர்ந்தார்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை தொடர்ந்து 2017 முதல் என்னைப்பற்றி இப்படி தொடர்ந்து அவதூறாக பேசிவருகிறார். அதனால் தொடர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

நயன்தாரா திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்ட சினிமா பிரபலங்கள்.. யார் அந்த பிரபலங்கள் தெரியுமா.?