பாலாவை நம்பி மோசம் போன சூர்யா… இவர் உண்மையிலே சைக்கோ தானா.? என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் வணங்கான், இந்த படத்தை சூர்யா அவருடைய 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து வந்த நிலையில், சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக படம் பாதியிலேயே நிற்கிறது.

பொதுவாக சூர்யா நடிக்கும் படங்களில் முன்கூட்டியே அந்த படத்தின் இயக்குனரிடம் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் கேட்பார். படத்தின் முழு ஸ்க்ரிப்டை படித்து முடித்த பின்பு தான் அந்த படத்தில் நடிப்பதற்கு சமம் தெரிவிப்பார் சூர்யா. ஆனால் தன்னை சினிமாவில் அடையாளம் காட்டியவர் பாலா என்பதற்காக பாலாவிடம் அப்படி அவர் நடந்து கொள்ளவில்லை.

மேலும் பொதுவாக ஒரு நடிகரிடம் தன்னுடைய படத்தின் கதையை பாலாவுக்கு சொல்லி புரிய வைக்கத் தெரியாது என்கின்ற ஒரு விமர்சனமும் உண்டு. அவரிடம் கதை கேட்டால் அதிகபட்சம் ஒரு மூன்று வரிகளில் சொல்லி முடித்து விடுவார். பின்பு படப்பிடிப்பு தொடங்கியதும் படம் நகர நகர அந்த படத்தின் கதையை டெவலப் செய்வார் பாலா. நம்பிக்கையின் அடிப்படையில் தான் இவருடைய படத்தில் நடிக்க நடிகர்கள் முன் வருவார்கள்.

இந்த நிலையில் வணங்கான் படத்தின் முதல் கட்ட படத்தின் போது சூர்யா- பாலா இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் பாதியில் நின்றது. ஒரு கட்டத்தில் சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் ஏற்பட்ட சமாதான பேச்சுவார்த்தையில் சமூகம் முடிவு ஏற்பட்டதும். அடுத்த கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

ஆனால் இந்த படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் திணறி வருகிறார் இயக்குனர் பாலா. இதனை தொடர்ந்து பல எழுத்தாளர்கள் உடன் இந்த படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் மதன் கார்க்கி, இயக்குனர் ஏ.எல். விஜய் என பலருடன் பாலா ஆலோசனை நடத்தினாலும் இந்த படத்தின் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாமல் குழப்பத்தில் உள்ளார் பாலா.

இந்நிலையில் வணங்கான் படம் பாதியிலேயே நிற்பதால், இந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. வணங்கான் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாமல் பாலா குழப்பத்தில் இருப்பதை கேள்வி பட்ட சினிமா துறையினர், உண்மையிலே இவர் சைக்கோ தானா.? என்று முனு முனுத்து வருகின்றனர்.

ஏமாற்ற பட்ட லெஜெண்ட் சரவணன்…கோமாளியாக்கப்பட்ட பரிதாபம்… எப்படி இருக்கு லெஜெண்ட்..!