லெஜெண்ட் சரவணன் திமிர் பேச்சு… அமிதாப்பச்சன், ரஜினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடிக்கும் புதிய படம் லெஜன்ட். சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்த பின்பு தன்னுடைய அருள் சரவணன் என்கின்ற பெயரை லெஜெண்ட் சரவணன் என்று மாற்றிக்கொண்டார். தன்னுடைய கடை விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் பண்டிகை நாட்களில் ஆட்டம் போட்டு விளம்பர படங்களில் நடித்து வந்த லெஜெண்ட் சரவணன் நடித்து வந்த விளம்பரப் படங்கள் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வைரலானது.

பண்டிகை நாட்கள் வந்தாலே அண்ணாச்சியை கையில பிடிக்க முடியாது நடிகைகள் மத்தியில் ஒரே ஆட்டம் பாட்டம் தான் என இவரின் விளம்பர படங்களை பார்ப்பவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற அவருடைய நீண்ட நாள் ஆசையை தன்னிடம் இருக்கும் பணத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக உருவெடுத்தார் லெஜெண்ட் சரவணன்.

பெரும் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆரம்பத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க பேசப்பட்டது, ஆனால் நயன்தாரா மறுத்துவிட்டார் இருந்தும். இருந்தும் அதிக சம்பளம் தருகிறோம் என்று லெஜெண்ட் சரவணன் தரப்பில் நயன்தாராவிடம் பேசப்பட்ட போது, திட்டவட்டமாக நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார் நயன்தாரா.

அப்போதே பணத்தால் எதை வேண்டுமானாலும் நாம் சாதித்து விட முடியாது என்பதை லெஜெண்ட் சரவணன் உணர்ந்திருக்க வேண்டும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 29ஆம் தேதி திரைக்கு வெளியில் வெளிவர இருக்கிறது. பெரும்பாலான சினிமா விமர்சகர்கள் யூ ட்யுப் சேனல்கள், சினிமா தொடர்பான ஊடகங்களுக்கு இந்த படத்தை பற்றிய பரபரப்பான செய்திகள் வெளியிடுவதற்காக லெஜெண்ட் சரவணன் தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்பட்டதா கூறப்படுகிறது.

இந்த படம் பேன் இந்தியா படம் என பட குழுவினர் விளம்பரம் செய்து வருவதை உச்சகட்ட காமெடியாக பார்க்கப்படுகிறது. மேலும் பேன் இந்தியா நடிகருக்கு வந்த சோதனை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு வெளியான கேஜிஎப், RRR மற்றும் விக்ரம் போன்ற படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக அந்த படத்தில் நடித்த நடிகர்கள் இந்தியா முழுவதும் சுற்றி வந்தனர்.

அதே பார்முலாவை பின்பற்றி லெஜெண்ட் சரவணன் ப்ரோமோஷன் செய்து வருகிறார். இது சந்திரமுகி படத்தில் கங்கா , சந்திரமுகியாக நின்றால், சந்திரமுகியாக நடந்தாள், சந்திரமுகியாக மாறினால் என்பது போன்று உள்ளது, லெஜெண்ட் சரவணனின் இந்த செயல். அதே போன்று பிரமோஷன் நிகழ்ச்சியில் தன்னை அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், உடன் ஒப்பிட்டு லெஜெண்ட் சரவணன் பேசி வருவது பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வயதில் ஏன் நடிக்க வந்தீர்கள் என பத்திரிகையாளர் கேட்டதற்கு, இதே கேள்வியை நடிகர் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களிடம் கேட்பீர்களா.? என தன்னை பெரிய நடிகர்களுடன் லெஜெண்ட் சரவணன் பேசியுள்ளது பேசிய திமிர் பேச்சு அவருடைய தலைக்கணத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் போன்றோர்கள் வயதான காலத்தில் சசினிமாவிற்கு வரவில்லை, இளம் வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்து போராடி வெற்றி பெற்றவர்கள். ஆனால் இவர் தன்னிடம் இருக்கும் பணத்தால் ஹீரோவாக சினிமாவில் நுழைந்தவர், பணம் மட்டுமே இருந்து, திறைமை இல்லாமல் அந்த துறையில் வெற்றி அடைய முடியாது என்பதை இந்த படம் வெளியான பின்பு லெஜெண்ட் சரவணனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்கின்றனர் லெஜெண்ட் சரவணனின் நடவடிக்கைகளை கவனித்து வரக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த செந்தில்வேலன் ஐ.பி.எஸ்.? ஒரு மருத்துவர், ஐ.பி.எஸ் ஆக உருவெடுத்த கதையல்ல நிஜம்..