நடிகர் சிவகுமாரின் ஜாதி வெறி….! தனக்கு நடந்த அவமானத்தை வேதனையுடன் தெரிவித்த முக்கிய பிரபலம் யார் தெரியுமா.?அடச்சீ… இப்படி ஒரு மனிதனா.?

0
Follow on Google News

நடிகர் சிவகுமார் குறித்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தனக்கு நடந்த ஜாதிய வன்மம் குறித்து வேதனையுடன் தெரிவித்துக்கொண்டார், நடிகர் சிவகுமார் மகன் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் என்கிற படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இது சமூகநீதிக்கான படம் என பட குழுவினர் விளம்பரம் செய்து வரும் இந்த வேலையில், அந்த படத்தில் நடித்த சூர்யா தந்தை சிவகுமார் குறித்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து ஜான் பாண்டியன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விடியோவில் ஜான் பாண்டியன் பேசியதாவது. இதுவரை யாரும் சொல்லாததை இன்று பதிவு செய்கின்றேன், ஒரு தடவை கோவையிலிருந்து விமானத்தில் நான், நடிகர் சிவகுமார் அவருடைய மகன் சூர்யா மற்றும் சிவக்குமார் மனைவி அனைவரும் ஒரே விமானத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தோம். என் அருகில் உள்ள இருக்கையில் நடிகர் சிவகுமார், அவருக்கு அடுத்த இருக்கையில் நடிகர் சூர்யா அமர்ந்திருந்தார்.

எனக்கு நடிகர் சிவகுமார் மீது நல்ல மரியாதை இருந்தது, அதற்கு காரணம் அவர் நல்ல நடிகர், சமூக ஆர்வலர் என்பதுதான். ஆனால் நான் விமானத்தில் அவர் அருகில் உட்கார்ந்த உடனே என்னுடைய மகனிடம் நீங்கள் போட்டோ எடுக்கக்கூடாது என சிவகுமார் கூறினார். என்னிடம் போட்டோ எடுக்க பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் என்னை எதற்காக அவருடன் இணைந்து போட்டு இருக்க கூடாது என்று சொன்னார் என்று எனக்கு ஒரு ஷாக் ஆகிவிட்டது.

அப்போது அவரிடம் ஜாதிய வெறி இருப்பதை நான் புரிந்து கொண்டேன். அதிலிருந்து அவரை நான் வெறுக்கத் தொடங்கினேன், நடிகர் சிவகுமார் மீது நான் வைத்திருந்த மரியாதையை அன்றுடன் முடித்துக் கொண்டேன். இந்த விஷயத்தை இதுவரை வெளியில் நான் சொல்லவில்லை இப்போதுதான் மீடியாவில் சொல்கிறேன். மேலும் அப்போது நான் சிவகுமார் இடம் சொன்னேன், எனது பையன்களுக்கு உங்கள் மகன் சூர்யா மற்றும் கார்த்திகை மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் அவர்களை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றேன், அவர்கள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னேன். அதற்கு சரி என்று சொல்லிவிட்டு பின்பு போன் செய்தால் சிவகுமார் எடுக்கவில்லை. ஆனால் விமானத்தில் என்னை போட்டோ எடுக்கக் கூடாது என்று சிவகுமார் சொன்னது தான் எனக்கு வருத்தமாக இருக்கின்றது. நான் யாரிடம் வலிக்க சென்று புகைப்படம் எடுத்ததில்லை, கீழ்தரமாக ஏன் அவர் சொன்னார், எந்த சூழ்நிலையில் சொன்னார், என்று நான் இங்கே விளக்கிக் கூற முடியவில்லை.

மீடியாக்கள் ஒருநாள் சிவக்குமாரிடம் கேள்வி கேட்க வேண்டும், இந்த மாதிரி ஜான்பாண்டியன் உங்கள் பையன் சூர்யா உடன் இணைந்து எதற்காக போட்டோ எடுக்க கூடாது என்று சொன்னீர்கள், அவர் மிகவும் வருத்தப்பட்டார் என்று கேள்வி கேளுங்கள். விமானத்தில் நிறையபேர் சூர்யாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள், அதைப் பார்த்து நான் சிரித்துக் கொண்டிருந்தேன்,

என் அருகில் இருந்த சிவகுமார் ஜான் நீங்க என் மகனுடன் நின்று போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் என்று சொன்னார். அப்போது சிவக்குமார் பேசுவது அனைத்தும் நடிப்பு இவர் என்பதை புரிந்து கொண்டேன், சாதி வெறியுடன் தான் பார்க்கிறார் என்பதையும் புரிந்து கொண்டேன் என ஜான் பாண்டியன் தனக்கு நடந்த ஜாதி வன்மம் குறித்து வருத்தத்துடன் வெளிப்படுத்திய அவர் இதற்கு முன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.