மாநாடு படத்தின் காட்சிகளை லீக் செய்து பரபரப்பை ஏற்படுத்திய பிரேம் ஜி..!விஷயம் வெங்கட் பிரபுவுக்கு தெரிந்தால் சும்மா இருப்பாரா.?ஏம்ப்பா.. இந்த ரண களத்திலும் உங்களுக்கு குதூகலம் கேக்குதா.?

0
Follow on Google News

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து நிலையில் பின்னர் நவ.25ஆம் தேதிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்க பட்ட நிலையில். ‘மாநாடு’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஓர் திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் படத்தை திரையில் காண முன்பதிவு செய்தவர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இப்படி மாநாடு படம் வெளியாகுமா ஆகாத என பெரும் குழப்பம் நீடித்து வந்த நிலையில். அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சகோதரர் பிரேம் ஜி மாநாடு படத்தில் ஓப்பனிங் காட்சி லீக் ஆனது என தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார் என்கிற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலர் முழு விவரம் அறிய பிரேம்ஜி டிவீட்டர் பக்கத்தில் சென்று பார்த்தனர்.

அதில் அவர் மாநாடு படத்தில் ஓப்பனிங் கட்சி லீக் ஆனது என பதிவு செய்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும், மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாகும் என திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகும் முன்பு வரும் விழிப்புணர்வு பிரசாரத்தை பேசி வெளியிட்டிருந்தார் பிரேம் ஜி. இதற்கு அவருடைய அண்ணன் மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, டேய்.. டேய்.. டேய் என பதிலளித்திருந்தார்..

இதற்கு சமூக வலைதளவாசிகள் இந்த ரண களத்திலும் உங்களுக்கு குதூகலம் கேக்குதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் மாநாடு படத்தின் சிக்கல்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டதால் படம் திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு நேற்று இரவு அறிவித்தது. அந்த வகையில் படம் இன்று (நவ.25) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் சிம்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.