தமிழ் நடிகர்கள் லாயக்கு இல்லை.. வெற்றிமாறன் எடுத்த அதிரடி முடிவு…! பரிதாபத்தில் இருக்கும் தமிழ் நடிகர்கள்..

0
Follow on Google News

சென்னை : என்டிஆரின் வாரிசு என தெலுங்கு திரையுலகில் அறிமுகமான ஜூனியர் என்டிஆர் தனது ஆரம்பகால திரைப்படங்களில் வாரிசு முத்திரையால் வலம்வந்தார். இருந்தபோதிலும் தனது பருமனான உடலைக்கொண்டு நளினமாக நடனமாடி அனைவரையும் வியக்க வைத்தார். எஸ்.எஸ் ராஜமௌலியின் திரைப்படம் அவரை ஒரு ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது.

ஜூனியர் என்டிஆரின் அந்த திரைப்படமே தமிழில் விஜயாகாந்த் நடிப்பில் கஜேந்திரா எனும் பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் என்டிஆர் தனது அடுத்தடுத்த படங்களில் கதை தேர்வுகளில் மட்டுமல்லாமல் தனது உடல் எடையை குறைப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தினார். மோகன்லாலுடன் இணைந்துநடித்த ஜனதா கேரேஜ் ஜூனியர் என்டிஆருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருந்தது.

இந்நிலையில் தான் மீண்டும் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு உலக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் சவாலான வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இதனால் அவரது அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமானது.

இந்நிலையில் தமிழில் அசுரன் பொல்லாதவன் மற்றும் வடசென்னை உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த வெற்றிமாறன் ஜூனியர் என்டிஆரிடம் ஒரு ஸ்க்ரிப்ட்டை கொடுத்தாக கூறப்படுகிறது. தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் மற்றும் பரோட்டா சூரியை வைத்து விடுதலை படங்களை இயக்கிவரும் வெற்றிமாறன் அடுத்து பான் இந்தியா படமாக ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்கவுள்ளார்.

அதேபோல கொரட்டலா சிவா மற்றும் கேஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கங்களில் படத்தை முடித்துவிட்டு ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறனுடன் இணைவார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இயக்குனர் சங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார், இயக்குனர் லிங்கு சாமி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்,

இந்நிலையில் இவர்களை தொடர்ந்து வெற்றி மாறனும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறது, இனி தமிழ் நடிகர்கள் லாயக்கு இல்லை என்று முடிவ செய்து விட்டார்களா என பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்… அடம் பிடிக்கும் ரஜினிகாந்த் … டென்ஷனில் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்தது தெரியுமா.?