விஜய்யை திட்டமிட்டு அசிங்கப்பட வைத்த SA சந்திரசேகர்… தந்தையே இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென நடிகர் விஜயின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் புதியதாக அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தந்தை தொடங்க இருக்கும் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. மேலும் எனது பெயரையோ, புகைப்படத்தையோ, எனது அகில இந்திய தளபதி மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்பு படுத்தி ஏதேனும் விவாகரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என அதிரடியாக அறிவித்தார் விஜய்.

மேலும் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் தாய் சோபா உட்பட்ட சில அவருடைய மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் விஜய். அப்போது இருந்து தற்பொழுது வரை விஜய் அவரது தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபனா இருவருடனும் பேசி கொள்வதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து மகன் விஜய் அவமானப்படும் வகையில் ஒரு சில விஷயங்களை செய்து வருகிறார் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர். சமீபத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியான போது அந்தப் படத்தை வெளிப்படையாகவே கடுமையாக விமர்சனம் செய்தார். படத்தின் கதாநாயகன் கதை தேர்வு செய்வதில் கோட்டை விட்டுவிட்டார் என்பது போன்று பேசியவர், படத்தின் இயக்குனரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இது விஜய் தந்தையே அவருடைய மகன் படம் நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டார் என்கிற காரணம் பீஸ்ட் படம் தோல்வியை உறுதி படுத்தும் விதத்தில் அமைந்தது. அதே போன்று விஜய் தாய்-தந்தை திருமண விழாவை மகன் இல்லாமல் தனியாக சந்திரசேகர் – ஷோபனா இருவரும் கொண்டாடினார்கள். இது பார்ப்பவர்களுக்கு மகன் இருந்தும் ஆதரவற்றவர் போன்று தாய் தந்தையினர் அவர்களின் திருமண விழாவை கொண்டாடுவது பரிதாபமாக இருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.

இது விஜய்க்கு அவப்பெயராகவும், அதே நேரத்தில் சந்திரசேகர் மற்றும் சோபாவுக்கு அனுதாபமும் ஏற்பட்டது. இந்நிலையில் தற்பொழுது மேலும் ஒரு பிரச்சனையில் விஜயை அசிங்கப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார் சந்திரசேகர். அவர் எடுத்த சட்டப்படி குற்றம் படத்தில் விளம்பர செலவுக்கு 73,000 பாக்கி வைத்து இதுவரை கொடுக்காமல் இழுத்து அடித்து வந்துள்ளார் சந்திரசேகர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சந்திரசேகர் வீட்டில் இருக்கும் பொருட்கள் ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் இந்தச் செய்தி விஜய் தந்தை வீட்டில் ஜப்தி என்பது விஜய்க்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தியது. மேலும் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் விஜய் அவருடைய தந்தை வாங்கிய 73 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்ட முன்வரவில்லை என்கின்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால் சந்திரசேகரிடம் 73 ஆயிரம் பணம் இல்லாமல் இல்லை, வேண்டுமென்றே விஜயை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அதை கட்டாமல் நீதிமன்ற வரை சென்று திட்டமிட்டு விஜய் அசிங்கப்படுத்தி வருகிறார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

ஒரே ஒரு பாடல் மொத்த படமும் குளோஸ்…லைக்கா திவால் தான்… யாரை ஏமாற்றுகிறார் மணிரத்தினம்..!