நன்றி மறந்த சிவகார்த்திகேயன்… இயக்குனர் பாண்டியராஜுக்கு ஏற்பட்ட பரிதாபம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த நடிகர் இருந்த சிவகார்த்திகேயன், சினிமாவில் காமெடி நடிகருக்கான வாய்ப்பு தேடி வந்த போது, அவருக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்து மெரினா படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இதன் பின்பு தனுஷ் உடன் 3 படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இந்த படத்திற்கு பின்பு அவருக்கென ஒரு நடிகருக்கான அடையாளம் கிடைத்து, அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்து குறுகிய காலத்தில் மிக பெரிய உச்சத்தை தொட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பின்பு அவருடைய சினிமா மார்க்கெட் கிடு கிடுவென உயர்த்து, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வர தொடங்கினர் சிவகார்த்திகேயன், இதன் பின்பு பட வாய்ப்புகள் குவிய, பிசி நடிகரானார் சிவகார்த்திகேயன்.

இந்த காலகட்டத்தில் தன்னுடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஏற்றார் போல் கதையும் தயார் செய்து கால்சீட் கேட்டிருந்தார் இயக்குனர் பாண்டிராஜ், ஆனால் அந்த காலகட்டத்தில் நான் ரெம்ப பிசி என்கிற தோரணையில் சிவகார்திகேயன் பாண்டிராஜை புறக்கணித்து விட்டார் என்று கூறப்பட்டது. இதனால் பண்டி ராஜ் – சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையில் அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு போதலாக வெடித்தது.

இனி இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ண வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படம் மிக பெரிய ஹிட் கொடுக்க. அந்த காலகட்டத்தில் ரெமோ, சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன், கடைக்குட்டி சிங்கம் போன்று கமெர்ஷியல் படம் ஓன்று சேர்ந்து பண்ணலாம் என பாண்டிராஜ்க்கு தூது அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டு, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பகையை மறந்து இணைத்தது சிவகார்த்திகேயன் – பாண்டிராஜ் கூட்டணி. இந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதன் பின்பு டாக்டர், டான் என்று தொடர்ந்து இரண்டு மிக பெரிய ஹிட் கொடுத்து, தமிழ் சினிமா முன்னனி நடிகர் வரிசையில், ரஜினி, விஜய், அஜித் அடுத்தபடியாக நான்காவது இடத்தில சிவகார்த்திகேயன் இருக்கிறது.

மறுப்பக்கம் நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் என தொடர் தோல்வியை கொடுத்துள்ள இயக்குனர் பாண்டிராஜ், அடுத்த படவாய்ப்புங்கள் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த சுழலில் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த பாண்டிராஜ், நம்ம மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என கேட்டுள்ளார். புதிய படத்திக்கான கதையையும் உங்களுக்கு ஏற்றார் போல் ரெடியாக இருக்கிறது என பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு முடியும், முடியாது என எந்த ஒரு பதிலும் சொல்லாமல் காலம் தாமதம் செய்து வந்துள்ளார் சிவகார்த்திகேயன். இருந்தும் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு புதிய படத்திற்காக மீண்டும் ஒரு முறை கால்சீட் கேட்க, அதற்கு சார் நான் ரெம்ப பேசி இப்போதைக்கு முடியாது என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிவகார்திகேயன், ஏன் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

அதில் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்தும் அவருடைய சொந்த தயாரிப்பில் எடுக்கப்பட்டு வரும் படங்கள். இதில் தொடர்ந்து புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து மிக குறைந்த அளவில் சில லட்சங்கள் மட்டுமே சம்பளமாக கொடுக்கிறார். இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்தால் அவருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தான் தன்னை சினிமாவுக்கு அடையாளம் காட்டியவர் பாண்டிராஜ் என்கிற நன்றி இல்லாமல், அவருடைய இயக்கத்தில் நடிக்க தற்பொழுது மறுத்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்று கூறப்படுகிறது.

மாணவி ஸ்ரீநிதி மாரணம்… சமூக போராளிகள் சூர்யா – ஜோதிகா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.?