சொந்த படம் எடுத்து கடனில் தத்தளிக்கு சிவகார்த்திகேயன்….. கடனை அடைக்க என்ன செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றி கொடி நாட்டி வெற்றி நடைபோட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன், மெரினா படத்தில் இயக்குனர் பாண்டியராஜன் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து பாண்டியராஜன் இயக்கத்தில் கேடி பில்லா கேலடி ரங்கா திரைப்படத்தில் நடிகர் விமல் உடன் இணைத்து நடித்தார், இந்த படத்துக்கு பின் நடிகர் தனுஷ் தயாரிப்பில் எதிர்நிச்சல் படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயன் அடுத்து வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

இதன் பின் அவர் நடித்த மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற படங்கள் சரி வர போகவில்லை என்றாலும் அடுத்து வந்த ரஜினிமுருகன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது, இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சம்பளமும் கிடு கிடுவென உயர்ந்தது, இந்நிலையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தால் பெரும் தொகையை சம்பாரித்து விடலாம் என நினைத்து தயாரிப்பு அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து பல படங்களை சொந்தமாக தயாரித்தார்.

தொடர்ந்து 5 படங்கள் வரை தயாரித்த சிவகார்த்திகேயன், அதில் ஒரு படம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது, மற்றோரு படம் படப்பிடிப்பு நடந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான மூன்று படங்களும் படு தோல்வி அடைந்து மிக பெரிய நட்டத்தை சிவகார்த்திகேயனுக்கு பெற்று தந்தது, தான் தயாரித்த முதல் படம் தோல்வியை தழுவிய உடன் சுதாரித்து தயாரிப்பு துறையை கைவிடாமல் தொடர்ந்து படம் தயாரித்த சிவகார்த்திகேயன் பெரும் கடன் சுமையில் இருப்பதாக கூறபடுகிறது.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் தனுஷ், விஜயசேதுபதி போன்ற நடிகர்கள் ஆரம்பத்தில் அவர்கள் தயாரித்த படங்கள் தோல்வியை தழுவியதும், இதில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை அறிந்து படம் தயாரிப்பதை கைவிட்டனர், இதில் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடினார், ஆனால் சிவகார்த்திகேயன் தொடர்ந்து அவரது தயாரிப்பில் வெளியான படம் தோல்வியை தழுவினாலும் தொடர்ந்து படம் தயாரித்து கடனாளியாகியுள்ளார்.

இந்நிலையில் கடும் கடன் சுமையில் இருக்கும் சிவகார்த்திகேயன் , பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர் தயாரிப்பில் தொடர்ந்து 5 படங்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் பெரும் தொகையை பெற்று முதலில் கடனை செலுத்திவிட்டு, கடும் கடன் சுமையில் இருந்து மீண்டு வர திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.