தனுஷ் – டிடி இருவரையும் ஒரே வீட்டில் கையும் களவுமாக பிடித்த ஐஸ்வர்யா.! தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பின்னணி என்ன.?

0
Follow on Google News

கடந்த சில வருடங்களாக சினிமா துறையை சேர்ந்த திருமணமான பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடி அவர்கள் விவாகரத்து செய்யும் அளவுக்கு கொண்டு சென்று விடுகிறார் தனுஷ் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் உச்சகட்டமாக தனுஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் ஒரு மனதாக பிரிவதாக முடிவு செய்துள்ள நிலையில் விரைவில் இருவரும் விவகாரத்து பெற இருப்பதாக கூறபடுகிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி DD வாழ்க்கையில் தனுஷ் சடுகுடு விளையாடி தகவல் வெளியாகி உள்ளது, தொகுப்பாளினி DD அவருடைய நீண்ட நாள் நண்பர் அஸ்வின் ரவிச்சந்திரன் என்பவரை 2014ல் திருமணம் செய்து குறுகிய காலத்தில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடுத்த இரண்டு வருடத்தில் விவாகரத்து பெற்றனர், இவர்களின் விவாகரத்து காரணம் தனுஷ் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து DD- தனுஷ் பற்றிய ரகசிய சம்பவம் ஓன்று வெளியாகி உள்ளது, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதால் அடிக்கடி அவர் வெளிநாடு செல்வது வழக்கம், தனுஷ் ஒருபக்கம் சினிமா படப்பிடிப்பில் பிசியாக இருக்க மறு பக்கம் அவருடைய மனைவி வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்வதில் ஆர்வமாக இருந்து வரும் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தியுள்ளார் தனுஷ்.

இந்த தகவல் ஐஸ்வர்யா கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றுள்ளனர், இதனை தொடர்ந்து வெளிநாடு பயணம் மேற்கொண்ட ஐஸ்வர்யா முன்கூட்டியே ஒரு நாள் முன்பாக தனுஷுக்கு தெரியாமல் சென்னை திரும்பியவர், அதிகாலை வீட்டுக்கு சென்றுள்ளார், அப்போது வீட்டில் கூடுதலாக ஒரு கார் நிறுத்தி இருப்பதை அறிந்து சந்தேகம் அடைந்தவர் வீட்டின் உள்ளே சென்ற போது தனுஷ் மற்றும் தொகுப்பாளினி DD உள்ளே இருப்பதை பார்த்து திகைத்துப்போய் நின்றுள்ளார்.

ஐஸ்வரியாவிடம் கையும் களவுமாக பிடிபட்ட தனுஷ் மற்றும் DD இருவரும் சிறிய சலசலப்புக்கு இடையே அங்கிருந்து தப்பித்து வெளியேறியுள்ளார் DD. இதன் பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இனிமேல் இது போன்று நடக்காது என தனுஷ் கேட்டு கொண்டதை தொடர்ந்து சற்று அமைதியாகியுள்ளார் ஐஸ்வர்யா. ஆனால் இந்த சம்பவத்துக்கு பின்பு தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா.

இதன் பின்பு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதித்து தனுஷை தனது கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார். ஆனால் சில காலம் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் இருந்து வந்த தனுஷ் மீண்டும் வேறு சில சக நடிகைகளிடம் தனது சேட்டைகளை தொடர்ந்துள்ளது. இது ஐஸ்வர்யா கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து குடும்பத்துக்குள் பிரச்சனை உருவெடுத்து தற்போது தனுஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் பிரியும் நிலைக்கு சென்றுள்ளது என்கிறது சினிமா வட்டாரம்.