நடிகர் அஜித் உயிருக்கு உயிராக காதலித்த நடிகை.! பெண் கேட்டு சென்ற போது நடிகையின் அம்மா என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருந்து வருகின்றவர் நடிகர் அஜித் குமார், தேவையின்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்காத நடிகர், தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை களைத்த தமிழ் சினிமாவில் ஒரே நடிகர் அஜித் குமார், இவர் ரசிகர் மன்றங்களை களைத்தாலும் கூட இவருக்கென உலகம் முளுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உண்டு, நடிகர் அஜித் குமார் நடிக்கும் ஒவ்வொரு படமும் வசூலை அள்ளி குவித்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் நடிகர் அஜித் நடித்த போது அந்த படத்தின் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்தார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன, தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடியாக வலம் வருகின்றனர் அஜித்-ஷாலினி ஜோடி. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் ஷாலினியை காதலிப்பதற்கு முன்பு தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்த சம்பவம் பல வருடங்களுக்கு பின் அவர் நடித்த படத்தில் நடித்த சக நடிகர்கள் மூலம் வெளியாகி உள்ளது.

நடிகை ஹீரா இவர் தமிழ் சினிமாவில் நடிகர் முரளி நடித்த இதயம் படத்தில் அறிமுகம் ஆனார் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த நடிகை ஹீரா, 1996ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், அப்போது இந்த படத்தில் நடித்த நடிகர் அஜித்குமார் நடிகை ஹீரா மீது காதல் வயப்பட்டுள்ளார், தொடர்ந்து காதலித்து வந்த நடிகர் அஜித் தனது காதலை ஹீரோவிடம் சொல்ல தயங்கியுள்ளார்.

பின் 1999 ஆம் ஆண்டு வெளியான நடிகர் அஜித் குமார் நடித்த தொடரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹீரா நடித்த போது, தொடர்ந்து பக்கம் பக்கமாக காதல் கடிதம் எழுதியுள்ளார் நடிகர் அஜித் குமார், ஆனால் அவர் எழுதிய காதல் கடிதத்தை தான் காதலிக்கும் ஹீரோவிடம் கொடுக்காமல் கிழித்து தூக்கி எறிவதும், பின் மீண்டும் காதல் கடிதம் எழுதுவது என தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் நடிகர் அஜித்து குமார்.

இப்படி அவர் காதல் கடிதம் எழுதி தூக்கி போட்ட பல கடிதங்களை அந்த படத்தில் நடித்த சக நடிகர்கள் கண்களில் தென்பட்டுள்ளது, அப்படி ஒருமுறை நடிகர் ரமேஷ் கண்ணா கண்ணிலும் நடிகர் அஜித் குமார் எழுதிய காதல் கடிதம் சிக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் நடிகர் அஜித் தனது காதலை உயிருக்கு உயிராக காதலித்த நடிகை ஹீராவிடம் தெரிவித்துள்ளார், ஆனால் ஹீராவின் தயார் தனது மகள் தற்போது பிசி நடிகையாக இருப்பதால் சமதிக்கவில்லையாம். அதன் பின் தனது அடுத்த படமான அமர்களத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த போது ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?