இனி பயில்வான் வாயே திறக்க முடியாது… ஒட்டு மொத்த சினிமா துறையும் களத்தில் இறங்கியது..!

0
Follow on Google News

சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர் நடிகைகளின் அந்தரங்கள் விஷயங்களை வெளிப்படுத்தி வருகின்றவர். இவர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், இவர் யூ ட்யூபில் சினிமா நடிகர் நடிகைகள் பற்றி அந்தரங்க விஷயங்களை பற்றி பேச தொடங்கிய பின்பு தான் இவர் பிரபலமானார்.

வரின் கிசு கிசு பேச்சுகளை கேட்க ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர்கள் கொடுக்கும் ஆதரவு தான் இவர் தொடர்ந்து பேசுவதற்கு காரணமாக இருக்கிறது. கடும் எதிர்ப்பு சினிமா துறையில் இருந்து இவருக்கு வந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடிகர் நடிகைகள் பற்றிய அந்தரங்க விஷயங்களை பேசிக்கொண்டே தான் இருக்கிறார். கேட்டால் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என பதில் தருவார்.

மேலும் இவர் பேசுவதற்கு சம்பந்தப்பட்ட நடிகர் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களை பற்றி மீண்டும் இதற்கு முன்பு பேசியதை விட அதிகமாக அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவார். இதனால் இவர் என்ன பேசினாலும் பெரும்பாலான நடிகர் கண்டுகொள்வதில்லை, நடிகை கஸ்தூரி மிஸ் மெட்ராஸ் பட்டம் அட்ஜஸ்ட் செய்துதான் வாங்கினார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பயில்வான் பேசியதற்கு, கஸ்தூரி தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது.

போலீஸ் புகார் தெரிவிக்க போவதாக கூட கஸ்தூரி மிரட்டினார். ஆனால் பயில்வான் கண்டு கொள்ளவில்லை. அதேபோன்று நடிகை ராதிகா அம்மா குறித்து தவறாக பேசினார் பயில்வான். இதனால் ஒரு முறை திருவான்மியூர் பீச்சில் காலை பயில்வான் நடைபயிற்சி மேற்கொண்ட போது எதிரே வந்த நடிகை ராதிகா ஆபாசமாக பேசி என் தாயை எப்படி நீ பேசலாம் என்று பயில்வான் ரங்கநாதனிடம் சண்டையிட்டார்.

ஆனால் இதன் பின்பு ராதிகா குறித்து மேலும் பல விஷயங்களை பயில்வான் வெளிப்படுத்தினார். இதனால் இவர் என்ன பேசினாலும் சினிமா துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் இவர் மீது நடவடிக்கை எடுக்க முன் வருவதில்லை. சமீபத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளியான இரவில் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பல அந்தரங்க விஷயங்களை வெளியிட்டார் பயில்வான் ரங்கநாதன்.

இதற்கு வழக்கம்போல் திருவான்மியூர் பீச்சிற்கு பயில்வான் ரங்கநாதன் நடைபயிற்சி மேற்கொண்ட போது அங்கே வந்த ரேகா நாயர் நேருக்கு நேர் பயில்வனுடன் சண்டையிட்டார், பின்பு போலீசிலும் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சினிமா துறையைச் சேர்ந்த பெரும்பாலான நடிகர் நடிகைகள், ரேகா நாயரை முன்னிறுத்தி இவர்கள் பின்னின்று செயல்பட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறத.

ரேகா நாயருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் பின்னின்று செய்து பயில்வான் ரங்கநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இனி அவர் யூட்யூபில் பேசாதவாறு செய்வதற்கான அனைத்து வேலைகளும் தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த பெரும்பாலானோர் ரேகா நாயரை முன்னிறுத்தி நடைபெற்று வருவதாக கூறப்படுவதால், மிக பெரிய ஆப்பு பயில்வான் ரங்கநாதனுக்கு இருக்கு என்கிறது சினிமா துறையினர்.

அச்சரியமூட்டு நயன்தாரா வீட்டு பாத்ரூம்… என்னனென்ன சிறப்பு அம்சங்கள் தெரியுமா.?வாயை பிளக்கும் பிரபலங்கள்..