தன்னை உதாசீன படுத்திய சூர்யா வருத்தப்பட வேண்டும்.! இயக்குனர் ஹரி சபதம்.! சூர்யாவுக்கு பதில் விக்ரம்…

0
Follow on Google News

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த அருவா படத்தில் தொடர்ந்து சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது, நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படத்துக்கு பின் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது, ஆனால் திடீரென சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருன் விஜய்யை வைத்து அருவா படத்தை ஹரி இயக்கப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சமீப காலமாக இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா இடையே கருத்து வேறுபாடு நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது, சூர்யா நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் 2 தான் அவர் கொடுத்த கடைசி வெற்றி அதன் பின் தொடர்ந்து தோல்வியை மட்டும் சந்தித்து வருகிறார், அதே வேலையில் இயக்குனர் ஹரி இயக்கிய சிங்கம் 3 மற்றும் சாமி 2 ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து தோல்வியில் இருந்து மீண்டும் எழுந்து வர அருவா படத்தை இயக்க முடிவு செய்த இயக்குனர் ஹரி படத்தின் முழு கதையையும் சூர்யாவிடம் தெரிவித்துள்ளார், ஆனால் சூர்யா முழு கதையையும் கேட்டுவிட்டு எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இயக்குனர் ஹரி தனது அருவா படத்தில் இருந்து கதாநாயனாக அருண் விஜயை நடிக்க வைக்க முடிவு செய்தார்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் தற்போது அருவா படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவுக்காக உருவாக்கப்பட்ட கதை என்பதால், தற்போது விக்ரம் நடிக்க இருப்பதால் கதையில் சில மாற்றங்கள் செய்துள்ள ஹரி, அருவா படத்தில் நடிகர் சூர்யா நடிக்காமல் போனதற்கு, தன்னை உதாசீன படுத்தியதற்கு வருத்த படும் அளவுக்கு அருவா படத்தை மிக பெரிய வெற்றி படமாக எடுக்க சபதம் மேற்கொண்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.