தனுஷை வாஸ் அவுட் செய்ய கதிரேசன் பின்னனியில் லதா..! லதா போடும் மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் ஏற்பட்ட உச்சக்கட்ட மோதலில், இருவரும் பிரிவதாக அறிவித்தாலும், இரண்டு குடும்பத்தினரும் பிரிந்த இந்த தம்பதியினரை இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர், இதில் குழந்தைகள் நலன் கருதி பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணைய வேண்டும் என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தார்.

தந்தையின் விருப்பத்துக்காக மீண்டும் கணவர் தனுஷ் உடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்தார் ஐஸ்வர்யா இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் குடும்பத்தினர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரை மீண்டும் இணைந்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தனுஷ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த மாமியார் லதா ரஜினிகாந்த் மருமகன் தனுஷ்க்கு தனது செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு நெருக்கடியை கொடுத்து வந்தார்.

இதனால் தனுஷை வைத்து படம் எடுக்க புதிய தயாரிப்பளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். மேலும் ஏற்கனவே தனுஷ் படத்தில் பணியாற்றியவர்கள் பாதியிலே விலகினார். இதன் பின்னணியில் பிரபல சினிமா பைனான்சியர் ஒருவர் ரஜினிகாந்த் குடும்பத்துக்கு உதவும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே தனுஷ் பெற்றோர் யார் என்கிற விவகாரம் மதுரை உயர்நீதிமன்றம் வரை சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்ஷி தம்பதியினர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், பள்ளியில் படிக்கும் போது சினிமா ஆர்வத்தில் சென்னை சென்றவர் தற்பொழுது பிரபல நடிகராக இருக்கிறார், எங்களுக்கு அவர் உதவி தொகை வழங்க வேண்டும் என வழக்கு பதிவு செய்து இருந்தனர். இதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜரானார்.

மேலும் தனுஷ் தரப்பில் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்பு கஸ்தூரி ராஜா- விஜயலக்ஷ்மி தம்பதியினர் மகன் தான் தனுஷ் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து,கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் வழக்கை ரத்து செய்தது. இந்நிலையில் மீண்டும் கதிரேசன் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார், அதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழில் தேதி குறிப்பிடவில்லை என்றும், அது போலியான ஆவணங்கள், ஆகையால் மீண்டும் இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ்க்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் மீண்டும் நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜராகும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தனுஷை சினிமாவில் வாஸ் அவுட் செய்வதற்காக கதிரேசன் பின்னணியில் லதா ரஜினிகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் அடிக்கடி நீதிமாற்றத்தில் ஆஜரானால் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படும், மேலும் இதனால் ஏற்படும் மனஉளைச்சல் காரணமாக நடிப்பில் கவனம் செலுத்த முடியாது, இதனால் தனுஷை முழுவதும் சினிமாவில் இருந்து வாஸ் அவுட் செய்து விடலாம் என்றும்,

மேலும், பிரபல சினிமா பைனாசியார் ஒருவர் நேரடியாக இல்லாமல் மதுரை பகுதியை சேர்ந்த சிலர் தூண்டுதலில் காரணமாக தான் கதிரேசன் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மேலும் அந்த பிரபல சினிமா பைனாசியார் ஒருவர் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு உதவும் வகையில் தொடர்ந்து நடிகர் தனுஷ்க்கு எதிராக பல வேலைகள் செய்து வருவதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

விரட்டியடித்த அஜித்… விஜய் விட்டு கதவை தட்டிய வடிவேலு..! அஜித் கோபத்துக்கு என்ன காரணம் தெரியுமா.?