அம்மா வேண்டாம்…. தனுஷிடம் கதறிய இரண்டு மகன்கள்..! என்ன நடந்து தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் பிரிவதாக அறிவித்து கடந்த இரண்டு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு, தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் குழந்தைகள் நலன் கருதி பிரிந்த தம்பதியினரை இணைந்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டனர், ஆனால் அந்த முயற்சி தோல்வியை தழுவியது.

இதன் பின்பு தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியரின் இரண்டு மகன்களும் அப்பா,அம்மா இருவரில் யாரிடம் இருக்க போகிறார்கள் என்கிற பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அம்மா – அப்பா இருவரும் மீண்டும் இணைய வேண்டும் அவர்களுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இரண்டு மகன்களின் விருப்பமாகவும் இருந்தது. ஆனால் அதற்கு வழியில்லாமல் போனதால் யாத்ரா, லிங்கா இரண்டு பேருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

தாய் – தந்தை பிரிவுக்கு பின்பு போயஸ் கார்டன் வீட்டில் பாட்டி லதா ரஜினிகாந்த் உடன் இருந்து வருகின்றனர் யாத்ரா, லிங்கா இருவரும், அம்மா ஐஸ்வர்யா சமீப காலமாக சினிமாவில் ரெம்ப பிசியாக இருப்பதால், குழந்தைகளை கண்டு கொள்வதில்லை, மேலும் வீட்டிற்கு வந்தால் கூட குழந்தைகளிடம் சிறிது நேரம் கூட செலவு செய்வதில்லை, குழந்தைகள் அம்மாவை நெருங்கி வந்தால் கூட குழந்தைகளை ஐஸ்வர்யா அரவணைப்பது கிடையாது என கூறப்படுகிறது.

மேலும் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா தீவிரமாக புதிய படத்திற்கான வேலையை ஈடுபட்டு வருகிறார். வீட்டிலும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் ஐஸ்வர்யாவிடம், அம்மா என்று ஆசையாக இரண்டு மகன்களும் சென்றால், தொந்தரவு செய்ய வேண்டாம் என முகத்தை சுண்டி குழந்தைகளிடம் ஐஸ்வர்யா பேசுவதால், அம்மா அருகில் சென்றால் டென்ஷனாகி விடுகிறார் என அம்மா அருகில் இரண்டு குழந்தைகளும் போவதே கிடையாது என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சினிமா படபிடிப்பு முடிந்து ஓய்வில் இருக்கும் நடிகர் தனுஷ், மாமியார் லதா வீட்டில் இருந்த இரண்டு மகன்களையும் வரவழைத்து அவர்களுடன் அதிக நேரத்தை செலவு செய்து வருகிறார். அப்பா தனுஷ் உடன் மிக மகிழ்ச்சியுடன் யாத்ரா, லிங்கா இருவரும் இருந்து வருகின்றனர். மேலும் அப்பா நாங்க உங்க கூடவே இருக்கிறோம், எங்களை மீண்டும் திரும்ப அம்மாவிடம் அனுப்ப வேண்டாம் என இரண்டு மகன்களும் அப்பா தனுஷிடம் தெரிவித்துள்ளனர்.

ஏன் என தந்தை கேட்க, அம்மாவை பார்த்தாலே எங்களுக்கு இப்போதெல்லாம் பயமா இருக்கு அப்பா, எங்களிடம் டென்ஷனாவே பேசுறாங்க, வெளியில் யாரும் எங்கேயுமே கூட்டிட்டு போக மாட்டேன் என்கிறார்கள், வீட்டிலே இருப்பது ரெம்ப போர் அடிக்குது, அதனால் உங்க கூடவே இருக்கிறோம் என இரண்டு மகன்களும் தெரிவித்துள்ளனர், அதற்கு மகன்களை சமாதானம் செய்த தனுஷ், இப்ப அப்பா ஃப்ரியா இருக்கேன், அதே மாதிரி அம்மா ஃப்ரியா இருக்கும் போது உங்க கூட ஜாலியா இருப்பாங்க என்று தனுஷ் அவருடைய இரண்டு மகன்களை சமாதான செய்ததாக கூறப்படுகிறது.

உன் அரசியல் நம்மகிட்ட வேண்டாம்.. விஜய்க்கு ஆப்பு வைத்த பீஸ்ட் பட தயாரிப்பாளர்..! என்ன நடந்தது தெரியுமா.?