என் மனைவியை கெடுத்தவர்கள் இவர்கள்… வேதனையில் புலம்பி தவிக்கும் பாலா..! யார் தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாலா – முத்துமலர் விவாகரத்து வழக்கு ரகசியமாக நடைபெற்று இவர்கள் விவாகரத்து பெற்று இருந்தாலும், கடந்த நான்கு வருடங்களாக இவர்களுக்கு பிரட்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்ததாகவும், இருவரும் ஒருமனதாக பேசி விவாகரத்து பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

பாலா – முத்துமலர் இருவர் பிரிவுக்கு முக்கிய காரணம் முத்துமலர் தடம்மாறி சென்றது தான் என கூறப்படுகிறது. பாலா வித்தியாசமான மனிதர் என்று கூறப்பட்டாலும், அவருடைய மனைவி குழந்தைகளிடம் அதிக பாசம் அன்பு கொண்டவர் இயக்குனர் பாலா என்பதை அவரது மனைவி முத்துமலர் பல மேடைகளில் பேசியுள்ளார். சினிமா நிகழ்ச்சிகளுக்கு கூட அதிகம் இயக்குனர் பாலா தனது மனைவி முத்துமலர் உடன் தான் வருவார்.

இப்படி கணவன் மனைவி இடையே நல்ல புரிதலுடன் சென்ற இவர்களின் வாழ்க்கையில், மனைவி முத்துமலர் மீது உள்ள நம்பிக்கையில் அவருக்கு அதிக சுதந்திரம் கொடுத்து பொது நிகழ்ச்சிகளுக்கு தனியாக கூட செல்ல அனுமதித்தார் பாலா, அடிக்கடி சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த முத்துமலருக்கு பிரபல சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மனைவிகளுடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் மிக நெருக்கமானாவது.

பாலா சினிமா படப்பிடிப்பில் பிசியாக இருந்து வந்ததால், தோழிகளிடம் அடிக்கடி வெளியில் ஊர் சுற்ற தொடங்கினார். இதனால் தோழிகளின் வாழ்க்கை நடைமுறைக்கு மாற தொடங்கிய முத்துமலர், அவரது உடை மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் வந்துள்ளது. இப்படி குடும்ப பெண்ணாக இருந்து வந்த முத்துமலர் சேர்க்கை சரியில்லாத காரணத்தினால் தடம்மாறி பயணிக்க தொடங்கியவர் பிரபல அரசியல் தலைவரின் மகனுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

அடிக்கடி டெல்லி, வெளிநாடு என கள்ளக்காதலனுடன் லூட்டி அடித்து வந்த முத்துமலர் விவகாரம் கணவர் பாலாவுக்கு தெரியவர இருவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இதன் பின்பு பாலா உடன் இணைந்து வாழ மாட்டேன் என முத்துமலர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பின் இருவரும் ஒரு மனதாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் தனது மனைவி சரியாக தான் இருந்து வந்தார், சினிமா துறையை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மனைவிகளுடன் நெருங்கி பழகிய பின்பு தான் தடம்மாறி சென்றுவிட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி தவித்து வருகிறார் பாலா என கூறப்படுகிறது.

உன் அரசியல் நம்மகிட்ட வேண்டாம்.. விஜய்க்கு ஆப்பு வைத்த பீஸ்ட் பட தயாரிப்பாளர்..! என்ன நடந்தது தெரியுமா.?