நிச்சயமான நடிகையை தளிட்டு போன தனுஷ்..! மாப்பிளை சும்மா இருப்பாரா.. பின் நடந்தது உங்களுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை திரிஷா, இவர் மீது தனுஷுக்கு ஒரு பார்வை இருந்து வந்த நிலையில், ஆடுகளம் படத்தில் முதலில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க இருந்தது திரிஷா தான், சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார் திரிஷா, ஆனால் படப்பிடிப்பு நடந்த சில நாட்களிலே நடிகர் தனுஷ் உடன் நெருக்கமான தோழியாக மாறிவிட்டார் திரிஷா.

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் படத்தில் இருந்து திரிஷா விலகினாலும், தனுஷ் உடன் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது என நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொழிலதிபர் வருண் மணியன் மற்றும் நடிகை திரிஷா இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் தேதி குறிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திரிஷாவுக்கு நிச்சயமான மூன்றாவது நாள் இரவு பார்ட்டிக்கு திரிஷாவை தாளிட்டு போன தனுஷ் அங்கே இருவரும் மது அருந்திவிட்டு கூத்தும் கும்மாளமாக இருந்துள்ளனர். இந்த தகவல் திரிஷாவை திருமணம் செய்யவிருக்கும் வருண் மணியனுக்கு தெரிய வந்துள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சினிமா நடிகை அப்படி இப்படி தான் இருப்பார்கள் இருந்தாலும் நிச்சயம் முடிந்து விட்டது, நம்ம சரி செய்ய முயற்சிப்போம் என திரிஷாவை தன் வசப்படுத்த முயற்சித்துள்ளார் வருண் மணியன்.

ஆனால் திரிஷா சும்மா இருந்தாலும் தனுஷ் விடுவதாக இல்லை, தொடர்ந்து திரிஷாவை இரவு பார்ட்டிகளுக்கு தள்ளிட்டு போகும் வேலையை செய்து வந்துள்ளார். இதன் பின்பு இது நமக்கு சரிப்பட்டு வராது என முடிவு செய்த வருண் மணியன் திருமணத்தை பாதியிலே நிறுத்தி திரிஷாவிடம் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் பாதியிலே நின்றதும் தனுஷ் – திரிஷா இருவரும் மேலும் நெருக்கமாக பழகி வந்த நிலையில்.

அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் தனக்கு ஜோடியாக நடிகை திரிஷாவுக்கு வாய்ப்பு கொடுத்து, படப்பிடிப்பு முடியும் வரை திரிஷா உடன் இணைந்து செம்ம லூட்டி அடித்துள்ளார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வருண்மணி பாதியிலே திருமணத்தை நிறுத்திவிட்டார், இல்லை என்றால் திருமணம் முடிந்தாலும் திரிஷாவை பின் தொடர்ந்து விவாகரத்து பெற்று தந்திருப்பார் தனுஷ், அந்த வகையில் வருண்மணி தப்பித்து கொண்டார் என பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.