கே.எஸ். ரவிக்குமாரை நம்ப வைத்து ஏமாற்றிய ரஜினிகாந்த்..! பாவம்யா..நடு ரோட்டில் நிற்கும் கே.எஸ்.ரவிக்குமார்..

0
Follow on Google News

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. இந்த படம் வெளியான போதே ரஜினிகாந்தின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர்களிடம் கதை கேட்கும் வேலையை தொடங்கினர் ரஜினிகாந்த், இதற்காக கே.எஸ்.ரவிகுமார், வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்கள் கதைகள் கூறியுள்ளனர்.

ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் ஒரு மையில் கல் என்றே சொல்லலாம். பாட்ஷா படம் வெளியாகி மிக பெரிய ஹிட் கொடுத்து யாரும் எட்டமுடியாத உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டமை படம் பார்த்துவிட்டு கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து தனக்கு ஒரு கதை தயார் செய்ய கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முத்து படத்தில் இணைந்தனர் கே.எஸ்.ரவிக்குமார்- ரஜினிகாந்த் கூட்டணி.

இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது, மேலும் அந்த கலக்கட்டத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், முத்து படத்தில் இடம் பெற்ற அரசியல் வசனங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பபை பெற்றது, மேலும் முத்து படம் ஜப்பானில் மிக பெரிய வரவேற்பை பெற்று, ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ரசிகர்கள் உருவாக காரணமாக இருந்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

இதன் பின்பு சுந்தர்.சி இயக்கத்தில் அருணாச்சலம் படத்தில் நடித்த ரஜினிகாந்த், மீண்டும் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்யுங்கள் என ரஜினிகாந்த் கேட்டு கொண்டதை தொடர்ந்து, இவர்கள் கூட்டணியில் உருவானது படையப்பா. இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்து உலக தமிழர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இதன் பின்பு ரஜினிகாந்த் – கே எஸ் ரவிக்குமார் கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்க பட்டது.

இதன் பின்பு, ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா அனிமேஷன் படம் இயக்க விருப்ப தெரிவிக்க அவரது விருப்பத்துக்கு ஏற்ப சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்து அனைவரும் பாராட்டும் விதத்தில் அருமையான கதையை கோச்சடையான் படத்துக்கு அமைத்து கொடுத்தார் கே. எஸ் ரவிக்குமார். சௌந்தர்யாவின் படைப்பில் கோச்சடையான் தோல்வியை தழுவினாலும் படத்தின் கதையை உருவாக்கிய கே.எஸ்.ரவிக்குமாரை அனைவரும் பாராட்டினார்கள்.

இதன் பின் ரஜினிகாந்த் நடிப்பில் படையப்பா போன்றே உருவான படம் லிங்கா, இந்த படம் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றாலும், படத்தின் கிளைமஸ் காட்சியில் வரும் பாராசூட் காட்சிகள் மற்றும் ரஜினிகாந்த் ஒபெனிக் சாங் வரவேற்பை பெறவில்லை, ஆனால் படத்தின் கதை மற்றும் திரைக்கதைகள் பாராட்டை பெற்றது, இதன் பின்பு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் எந்த ஒரு படமும் இயக்கவில்லை.

இந்நிலையில் பல்வேறு கட்டங்களில் நடிகர் ரஜினிகாந்த் வெற்றிக்கு துணையாக இருந்து வந்த கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தும் கதையை ஏற்பாடு செய்ய கே.எஸ்.ரவிக்குமார் மிக பெரிய நம்பிக்கையில் கதையை தயார் செய்துள்ளார், கதையை கேட்ட ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்து ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் நம்பிக்கையில் காத்திருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத விதமாக, ரஜினிகாந்த் அடுத்த புதிய படத்தை தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கே.எஸ் .ரவிக்குமாரை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ரஜினிகாந்த் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் வெற்றி இயக்குனராக கொடி கட்டி பறந்த கே.எஸ்.ரவிக்குமார் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது.