பயில்வான் உடன் ஏற்பட்ட உச்சகட்ட மோதல்…. மன்னிப்பு கேட்ட கஸ்தூரி..! எதற்காக மன்னிப்பு கேட்டார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை கஸ்தூரி மற்றும் சினிமா துறையை சேர்த்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இடையே இருந்து வந்த மோதல் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. நடிகை கஸ்தூரி பங்குபெற்ற மிஸ் சென்னை அழகி போட்டியில் நடுவர்களிடம் அட்ஜஸ் செய்து தான் வெற்றி பெற்றார் என பயில்வான் பேச அதற்கு மிக கடுமையான வார்த்தைகளால் பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கி இருந்தார் நடிகை கஸ்தூரி.

இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் கஸ்தூரியை சீண்டிய பயில்வான், நான் பொய் பேசவில்லை உண்மையை தான் பேசினேன் என தான் இதற்கு முன் கஸ்தூரி பற்றி பேசியதை நியாய படுத்தி பேசி இருந்தார். இதனை தொடர்ந்து பயில்வான் ரங்கநாதனுக்கு பதில் தரும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட கஸ்தூரி, அதில்,நான் பங்கு பெற்ற மிஸ் சென்னை அழகி போட்டியில் அழகி பட்டத்தை மேடையில் வழங்கியது நடிகை ரேகா.

அப்படி இருக்கும் போது நான் அட்ஜெஸ்ட் செய்து அழகி படம் வாங்கியிருந்தால், நடிகை ரேகா உடன் ஒரு பெண்ணும் மற்றொரு பெண் எப்படி என்ன செய்ய முடியும், என்றும் மேலும் நீயெல்லாம் ஒரு ஆம்பளையா.? என கேட்ட கஸ்தூரி. தொடர்ந்து என்னை பற்றி பொய்யான தகவலை தெரிவித்து வரும் பயில்வான் மீது புகார் தெரிவிக்க இருப்பதாகவும், இது வரை பொறுமையாக இருந்தேன், இனிமேல் அப்படி இருக்க போவது இல்லை.

ஏன், அவதூறு பேசி வரும் இவர் மீது யாரும் புகார் தெரிவிக்க வில்லை என்றால், ஒருவர் மீது நம் புகார் தெரிவித்தால், பின் படப்பிடிப்பு நேரத்தில் தேவையின்றி நீதிமன்றம் அல்லது போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருக்கும். அதனால் தான் இவர் மீது யாரும் புகார் கொடுக்க முன் வரவில்லை, ஆனால், இனி இவரை விட்டு வைக்க கூடாது.இனிமேல் இவர் பொய் பேசுவதை நிறுத்தும் வகையில், இவர் மீது புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்த நடிகை கஸ்தூரி.

மேலும், பொதுவா பன்றிகளை பற்றி சொன்னாள் சாக்கடையில் உருளும், மலத்தை சாப்பிடும், ஆனால் இந்த பன்றி ஒரு வித்தியாசமான பன்றி, இன்னும் சொல்லப் போனால் மனித பன்றி, நாற்றம் அடிக்கின்ற அனைத்தையும் உருவாக்குகின்றது இந்த மனித பன்றி தான். ரொம்ப சாரி உணர்ச்சிவசப்பட்டு அந்த மனிதரை பன்றி அப்படி என்று சொன்னதற்கு பன்றிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பயில்வான் ரங்கநாதனை மிக கடுமையாக திட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி.