மகன் கேட்ட அந்த ஒரே கேள்வி….உச்சக்கட்ட அவமானத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா..!இந்த வயதில் என்ன கேள்வி கேட்டார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி 17ம் தேதி இருவரும் பிரிவதாக அதிரடியாக அறிவித்து சுமார் 18 வருட தங்களில் திருமண வாழ்க்கையை முறித்து கொண்டனர். தனுஷ் மீது ஏகப்பட்ட கிசு கிசு வெளியே வந்த வண்ணம் இருந்தாலும், இதெல்லாம் சாதாரணமப்பா.. ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிகள் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில்.

இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் பிரச்சனை இது என்பதால், இந்த விவகாரம் அதீத முக்கியதுவம் பெற்றது. எந்த ஒரு காரணத்துக்காகவும் இவர்கள் பிரிய கூடாது, மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என பல தரப்பில் இருந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு 15 வயதில் யாத்ரா, 11 வயதில் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர், இவர்கள் இருவரும் பெரும்பாலும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் தான் அதிக நாட்கள் வளர்ந்தவர்கள். தந்தை தனுஷ் மீது அதிக பாசம் உள்ளவர்கள் இவர்கள். இதில் மூத்த மகன் யாத்ரா தனது தந்தை தனுஷ் மற்றும் தாய் ஐஸ்வர்யா இருவரிடம் அவர் வயதை தாண்டி பல விஷயங்களை பகிர கூடியவர்.

அதே போன்று தாத்தா ரஜினிகாந்திடம் இவர் கேட்கும் கேள்விக்கு அவரால் பதில் சொல்லவே முடியாதாம், அந்த அளவுக்கு தனது வயதை மீறி அறிவுத்திறனுடன் பேச கூடியவர் யாத்ரா. இந்நிலையில் இரண்டு மகன்கள் என்ன நினைக்கிறார்கள் என சற்றும் யோசிக்காமல், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக தீடிரென எடுத்த இந்த முடிவு, விவரம் அறிந்த மூத்த மகன் யாத்ராவை மிக பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைய பேச்சுவார்த்தை நடந்து வரும் இந்த நிலையில். அவர்களின் மகன்களிடம் பிரச்சனை விரைவில் முடிந்து அம்மா – அப்பா சேர்ந்து விருவார்கள், அதுவரை நீங்க யாருடன் இருக்கீங்க என கேட்டதற்கு, எனது அம்மாவுக்கு அவருடைய அப்பா அல்லது அவங்க அம்மா இருவரில் யாருடனாவது ஒருவருடன் தான் நீங்க இருக்க வேண்டும் என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்வர்.

அதே போன்று என் தந்தையிடம் இதே கேள்வியை கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார் என மூத்த மகன் யாத்ரா கேட்ட கேள்வி அவரிடம் பேசியவர்களை வாயடைத்து போக வைத்துள்ளது. சென்னையில் இருக்கும் மகன் பேசிய விவகாரம் ஹைதராபாத்தில் உள்ள தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் தெரியப்படுத்த பட்டத்தை தொடர்ந்து. மகனின் இந்த கேள்விக்கு பதில் கூற முடியாமல் உச்சக்கட்ட அவமானத்தில் இருக்கும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் விரைவில் மகன்களின் விருப்பத்துக்காக இணைந்து வாழ்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறபடுகிறது.

5000 அமெரிக்க டாலர்.. ஆஸ்கர் யூடியூபில் ஜெய்பீம்..! சூர்யா கும்பலில் மாபெரும் பித்தலாட்டத்தை கிழித்து தொங்கவிட்ட பரிதாபம்..