ரோகிணி ஒரு டுபாக்கூர்… விஜயாவிடம் உளறி கொட்டிய மலேசியா செட்டப் மாமா… விறுவிறுப்புடன் சிறகடிக்க ஆசை..

0
Follow on Google News

சிறகடிக்க ஆசையின் குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருக்க, அப்போது விஜயா, “ரோகிணி உன் அப்பா என்ன ஆனாரு” என கேட்கிறார். “நான் கால் பண்ணே அவரு நம்பரு ரீச் ஆகல. போன் ஸ்விட்ச் ஆஃப்லயே இருக்கு” என ரோகிணி சொல்கிறார். “உங்க மாமாவுக்கு கால் பண்ண வேண்டியது தானே” என முத்து கேட்கிறார். விஜயா ரோகிணியிடம், அப்பா வராருனு சொன்ன வர்ல, மாமாவும் வர்ல இதெல்லாம் நம்பலாமா வேண்டாவானு எனக்கு ஒன்னுமே புரியல” என சொல்கிறார்.

சாப்பிட்டு முடித்த பின் மீண்டும் விஜயா ரோகிணியிடம் அவரின் அப்பா பற்றி கேட்கிறார். ”தெரியாம தான் கேட்குறேன். நிஜமாவே அப்படி ஒரு அப்பா இருக்காரா? இல்ல அது உன் கற்பனையா?. உன் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே நான் இதை கேட்டுகிட்டு இருக்கேன். இன்னும் அவரு ஃபோன்ல பேசி கூட நான் இதுவரையிலும் கேட்டது இல்லை” என்கிறார் விஜயா.

பின் ரோகிணி ”என் அப்பா ஏன் வர்லனு இதுவரையிலும் எனக்கு தெரியல ஆண்டி” என்கிறார். ”மனோஜ் வேணும்னா இதெல்லாம் நம்பலாம் . ஆனா என்கிட்ட இதெல்லாம் நடக்காது” என விஜயா சொல்கிறார். ”உங்க அப்பா இங்க வர்லனு வை, அப்றம் இந்த வீட்ல உன் இடம் எங்க இருக்குனு நான் முடிவு பண்ணுவேன். மனோஜ்காக கூட நான் யோசிக்க மாட்டேன் ஜாக்கிறதை” என விஜயா சொல்கிறார்.

இந்நிலையில் சிறகடிக்க ஆசையில் ரோகிணியின் மாமாவாக நடித்த கறிக்கடைக்காரர் விஜயா வீட்டிற்கு வந்து விஜயா மற்றும் அண்ணாமலையிடம் பேசுகிறார். அப்போது, “ரோகிணியின் அப்பாவை அவருடைய நண்பர்கள் சிலர் சதி வேலை செய்து ஏமாற்றி பிசினஸில் கடனில் முழ்க வச்சுட்டாங்க. அதனால் ரோகிணியின் அப்பா இப்போ மலேசியா ஜெயிலில் இருக்கிறார்கள்” என்று சொல்ல அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாகிறார்.

அதற்கு முத்து என்னது மலேசிய ஜெயிலில் இருக்காங்களா? என்று கேட்க ,ஆமாப்பா அப்படித்தான் சொல்ல சொன்னாங்க என்று கறிக்கடைக்காரர் வாயை விட்டு விடுகிறார். இதை சரியாக பிடித்த மீனா என்னது சொல்ல சொன்னாங்களா? என்று கேள்வி கேட்க, கறிக்கடைக்காரர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழிக்கிறார். இப்படி மீண்டும் கறிக்கடைகாரரை செட்டப் செய்து மீண்டும் மாமாவாக நடிக்க வரவைத்து சிக்கி கொள்கிறார் ரோகிணி.

ஏற்கனவே ரோகிணி மீது சந்தேகத்துடன் இருக்கும் முத்து ரோகிணியின் கறிக்கடை மாமா ஒரு டுபாக்கூர், இது செட்டப் மாமா என சந்தேகித்து, இந்த செட்டப் மாமா உண்மையிலே யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் முத்து, மறுப்பக்கம் விஜயாவுக்கு செட்டப் மாமா மீது சந்தேகம் வர தொடக்குகிறது.

இனி வரும் நாட்களில் ரோகினின் உண்மை முகம் தெரிய வருமா? முத்து கண்டுபிடிப்பாரா? ரோகிணியின் நிலைமை தான் என்ன? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் போன்ற கொண்டிருக்கின்றது. ரோகிணி இன்னொரு பெரிய பிரான்ச்சில் தன்னுடைய பியூட்டி பார்லரை இணைத்து இருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் அதை விற்றுவிட்டு அங்கே வேலைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது முத்துவுக்கு தெரியும், அதற்கும் ரோகினி சிக்கிவிடுவாரா என்ற எதிர்பார்ப்புடன் சீரியல் வேகமாக போகிறது.