ஐஸ்வர்யா – தனுஷ் இருவருக்கும் இரண்டாவது திருமண ஏற்பாடு… பொண்ணு – மாப்பிள்ளை யார் தெரியுமா.?

0
Follow on Google News

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து வாழப்போவதாக ட்விட்டரில் அறிவித்த போதே இணையம் முழுவதும் ஏராளமான விமர்சனங்களும் கிசுகிசுக்களும் வலம் வந்தன.இந்நிலையில், தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் நீதிமன்றத்தில் சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இப்படியான சூழலில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர், விவாகரத்து பெற்ற கையோடு தனுஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகவும், ஐஸ்வர்யாவின் ரகசிய காதலே இருவரும் பிரிவதற்கு காரணமாக அமைந்தது என்றும் சேனல் ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், ஐஸ்வர்யாவும் தனுஷம் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் லதா குடும்பத்தில் இருந்து இவர்களது கல்யாணத்திற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவற்றை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பல பிரச்சனைகளை தாண்டி திருமணம் செய்து கொண்டாலும், தனுஷின் அப்பா அம்மாவிற்கு ரஜினி குடும்பத்தில் போதுமான மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குடும்பங்களுக்கிடையேயான பிரச்சனை ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் திருமணத்திற்குப் பிறகு தனுசுக்கு பல காதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக இன்று வரை தனுஷ் உடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் ஏராளமான கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனர் ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாகவும் தகவல்கள் கசிந்தன.

இப்படி கணவன் மனைவி இருவரும் திருமணத்திற்கு பிறகு ஏராளமான கிசுகிசுகளுக்கு ஆளாகி வந்தனர். இதுவே அவர்களிடையே பிரச்சனையை வெடிக்கச் செய்துள்ளது. கணவன் மனைவி இருவரும் வீட்டிற்குள்ளேயே முட்டலும் மோதலுமாக சண்டையிட்டு வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்.

இதை அடுத்து கணவன் மனைவி இருவரும் அவரவர் வேலையில் படு பிஸியாகி விட்டனர். ஆனால் தனுஷ் தரப்பில் இருக்கும் ஒரு சிலர் ஐஸ்வர்யாவின் ரகசிய காதல் பற்றி பேசி அவர் மீது குற்றம் சாட்டி வந்துள்ளனர். அதற்கு ஐஸ்வர்யா தரப்பினர், “தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை விட்டு வைக்க மாட்டார் ..ஏராளமான காதல் செய்து இருக்கிறார் …அவர் என்ன யோக்கியமா ” என்று பதிலுக்கு பேசியுள்ளனர். இப்படி இரு தரப்பிலும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா, இன்னும் ஆறு மாதத்தில் விவாகரத்து கிடைத்தவுடன் தனுஷுக்கு தன்னுடைய ஜாதியிலேயே நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாக கூறியதாக பத்திரிக்கையாளர், அதேபோல் ஐஸ்வர்யாவுக்கும் அவர் காதலித்த உதவி இயக்குனருக்கும் விரைவில் திருமண ஏற்பாடுகள் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தனுஷ்க்கு பொண்ணு ரெடி, ஐஸ்வர்யாவுக்கு மாப்பிளை ரெடி, இவர்கள் இருவரும் அடுத்த திருமணம் செய்யவேண்டும் என்றால் சட்டப்படி விவாகரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே தற்பொழுது விவாகரத்து செய்ய நீதிமன்றத்தை இருவரும் நாடியுள்ளார்கள் என்றும். ஒரு பக்கம் விவாகரத்து வேலை வாங்குவது தொடர்பான வேலைகள் நடந்து வந்தாலும், மறுப்பக்கம் திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.