30 லட்சம் மேட்டரை முத்து – மீனாவிடம் போட்டுவிட்டு போலீசார்..சிறகடிக்க ஆசையின் அடுத்த ட்விஸ்ட்..

0
Follow on Google News

சிறகடிக்க ஆசையில் முத்து குடித்துவிட்டு கார் ஓட்டியதாக அவருடைய கார் பறிமுதல் செய்யப்படுகிறது. குடும்பத்தினர் அனைவரும் முத்து குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாக நினைந்து முத்துவை யாரும் நம்பவில்லை. ஒரு கட்டத்தில் மீனா கணவர் முத்து குடிக்கவில்லை என்பதை உணர்ந்து தன்னுடைய கணவரை காப்பாற்ற முத்து குடித்ததாக சொல்லப்படும் டாஸ்மாக் கடைக்கு செல்கிறார். அங்கே அந்த அந்த ஓனரிடம் கெஞ்சி கேட்டு சிசிடிவி காட்சிகளை பார்க்கிறார் மீனா.

அதில் முத்து குடிக்காததை பார்க்கும் மீனா, சிட்டி வீடியோ எடுப்பதையும் பார்த்து விடுகிரார். சிட்டி தான் தன்னுடைய கணவர் முத்துவை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார் என்பதை கண்டுபிடிக்கும் மீனா, இந்த வீடியோவை எடுத்து ரிலீஸ் செய்தது சிட்டி தான், தன்னுடைய கணவர் முத்து எந்த தவறும் செய்யவில்லை என்பதை உணர்ந்த மீனா நேரடியாக முத்துவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கிறார்.

இதனை தொடர்ந்து கணவர் முத்து நல்லவர் என்பதை அனைவர் மத்தியிலும் நிரூபிப்பேன் என முத்துவுடன் காவல் நிலையம் செல்கிறார் மீனா, மேலும் முத்து மீது மரியாதை வைத்துள்ள அரசியல் பிரமுகர் இந்த விஷயம் தெரிந்து உடனே முத்துவுக்கு போன் போட, தலைவரே நான் போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கேன் என முத்து தெரிவிக்க, ஏன் முத்து உனக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே என்கிட்ட சொல்ல மாட்டியா, உடனே அங்க இருக்கும் போலீசாரிடம் போன குடு என்கிறார் தலைவர்.

நம்ம பையன் தான் உடனே பிரச்சனையை முடித்து விடுக்க இல்லை சொல்லுங்க மினிஸ்டர்ட பேசணுமா என கேட்க, அதெல்லாம் வேண்டாம், என்னனுக்கு முடிச்சு அனுப்பி விடுகிறோம் என போலீசார் தெரிவிக்கிறார்கள். இதன் பின்பு தவறாக வீடியோ எடுத்து வெளியிட்ட சிட்டியை, பிடித்து முத்து மீது எந்த தவறும் இல்லை, நான் தான் அவரை பழிவாங்க இந்த மாதிரி செய்தேன் என பேச வைத்து வீடியோ வெளியாகி முத்து நல்லவர் என அனைவர்க்கும் தெரிய வருகிறது.

போலீஸ் ஸ்டேஷனில் ஏன்பா முத்து நீ ஒரு பொண்ணுக்கு ஜாமின் போட்டியே, அது கூட கனடா போறேன்னு சொல்லிச்செ போயிருச்சா என போலீசார் கேட்க, எந்த பொண்ணு சார் என முத்து கேட்க, அட 27 லட்சத்தை ஏமாற்றிட்டு கண்டா ஓட்டிட்டு திரும்ப வந்து பணத்தை இழந்த கணவர் மனைவி கிட்ட மாட்டிக்குச்சு, அதன் பிறகு வட்டியோடு முப்பது லட்சத்தை செட்டில் செய்துட்டு போனங்களா அந்த பொண்ணு தான் என போலீசார் தெரிவிக்க.

என்னாது 27 லட்சமா.? ஆமா யாரை ஏமாற்றினாங்க என முத்து கேட்க, அந்த பையன் பெரு கூட மனோஜ் என்று சொல்ல, உடனே முத்துவுக்கு அணைத்து விஷயமும் தெரிய வருகிறது. உடனே மீனாவிடம், பார்த்தியா இந்த ஓடுகாலி என்ன செய்துள்ளான். தூக்கிட்டு போன 27 லட்சத்தை வட்டியோடு 30 லட்சமா வாங்கிட்டு, அந்த பார்லர் அம்மா அப்பா மலேசியாவில் இருந்து அனுப்பியதா வீட்டில் இரண்டு பேரும் நாடகத்தை போடுறாங்க என முத்து மீனாவிடம் தெரிவிக்கிறார்.

இதனை தொடர்ந்து கார் கிடைத்த மகிழ்ச்சியில், முத்து – மீனா இருவரும் வீட்டிற்கு செல்கிறார்கள், குறிப்பாக மனோஜ் – ரோகினி இருவரும் செய்த தில்லாலங்கடியை தெரிந்து கொண்ட முத்து – மீனா இருவரும் குடும்பத்தினர் மத்தியில் போட்டுடைப்பார்களா.?இல்லை, மனோஜ் – ரோகினி இருவரும் என்னெல்லாம் இன்னும் செய்கிறார்கள் என்பதை ஆட விட்டு வேடிக்கை பார்க்க போகிறார்களா என அடுத்து சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here