ஜீவாவுடன் வீட்டிற்கு வரும் முத்து.. வசமாக சிக்கும் ரோகிணி – மனோஜ்… சிறகடிக்க ஆசையில் மக்கள் எதிர்பார்த்தது இது தானே…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. தற்போது சீரியலில் முத்து அரசியல்வாதி ஒருவருக்கு கார் பேசி வாங்கி கொடுக்கிறார். அப்போது மீனாவை பழிவாங்க சிட்டி நினைக்கிறார். கார் வாங்கியதற்காக அரசியல்வாதி பார்ட்டி வைக்கிறார்.

இருந்தும் முத்து சாப்பிடாமல் அவர்களுக்கு உதவி செய்துவிட்டு செல்கிறார். ஆனால், இதை பார்த்த சிட்டி, முத்து குடிப்பது போல வீடியோ எடிட் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார். அந்த வீடியோவை மீனாவின் தம்பி சத்யா, வீட்டில் உள்ள எல்லோருக்கும் காண்பிக்கிறார். அதை பார்த்து மீனா அதிர்ச்சி ஆகிறார். இன்னொரு பக்கம் வீடியோ முழுவதுமே எல்லோருக்குமே கிடைக்கிறது. சுருதியின் அப்பா போலீசுக்கு போன் செய்து விபரத்தை சொல்கிறார்.

பின் முத்து கார் ஓட்டி கொண்டு வரும்போது போலீஸ் அவரை மடக்கி காரை எடுத்து செல்கிறார்கள். முத்து தன் மீது தவறு இல்லை என்று எவ்வளவோ போராடியும் போலீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. வீட்டில் எல்லோருமே முத்துவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல் ரோகினி, மனோஜ், விஜய் எல்லாரும் முத்துவை திட்டுகிறார்கள். முத்து, மீனாவின் கையை பிடித்து நான் குடிக்கவில்லை என்று கெஞ்சுகிறார்.

தன் பக்கம் நியாயத்தை முத்து பேசும்போது யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கோபப்பட்ட அண்ணாமலை, முத்துவை அடித்து விடுகிறார். தன்னை யாரும் நம்பவில்லை என உடைந்துபோகிறார் முத்து. மீனா போகும் இடமெல்லாம் ”முத்து இப்டி பண்ணுவாருனு நாங்க நெனைக்கவே இல்லை மீனா” என்று சொல்கின்றனர். ஒரு மருந்தை மீனாவிடம் கொடுத்து, இதை அவருக்கு கொடுத்தா , இனி அவருக்கு குடிக்கனும்ன்ற எண்ணமே வராது என்று சொல்லி கொடுக்கின்றனர்.

மீனா ஆரஞ்சு ஜூஸ் போட்டு அதில் அந்த மருந்தை கலந்து வைக்கின்றார். அதற்குள் விஜயா வந்து அந்த ஜூஸை எடுத்து குடித்து விடுகிறார். மீனா அதில் மருந்து கலந்து வைத்திருக்கின்றேன் என்று சொல்ல வருகிறார். ஆனால் விஜயா அதை காது கொடுத்து கேட்கவே இல்லை. மீனாவை வழியில் பார்க்கும் செல்வம், முத்து குடிக்கவில்லை என்ற உண்மையை சொல்கின்றார். இதை கேட்டு மீனா வருத்தப்படுகின்றார். பின் விஜயாவுக்கு வயிறு சரியில்லாமல் ஆகிறது.

மீனா இப்போது முத்து மேல் கோபமாக இருப்பதால், மீனா முத்துவுக்காக ஹெல்ப் பண்ண மாட்டாரா? என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் செல்வமாக நடிக்கும் பழனியப்பன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்ளூ கொடுத்துள்ளார். அதாவது போன வாரத்தில் தொடங்கப்பட்ட பிரச்சனை இந்த வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இந்த வாரத்தில் தொடங்கும் பிரச்சனை அடுத்த வாரத்தில் தான் முடிவுக்கு வரும் என்று கூறியிருந்தார்.

இதனால் போன வாரத்திலேயே முத்து மீது குடிகாரன் என்ற பழி இந்த வாரம் அது முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இப்போது கோமதி பிரியா வெளியிட்ட வீடியோவில் ஜீவாவும் கோமதி பிரியாவும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் முத்துவுக்காக சப்போர்ட் செய்து ஜீவா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த பிரச்சனையில் முத்துவுக்கு ஜீவா தான் உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முத்துவுக்கு ஜீவா ஹெல்ப் பண்ணியதும் முத்து தனக்கு கடவுளே இனி ஜீவா தான் என்று சொல்லி வீட்டிற்கு கூட்டிட்டு போகும் போது தான் மனோஜ் பற்றிய ரகசியங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் என்ன நடக்கப்போகிறது என்று இனிவரும் எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here