நான் அப்படி தான்.. உங்களுக்கு ஏன் எரியுது… பாடகி ராஜலக்ஷ்மி செந்தில் ஆவேசம் பதிலடி..

0
Follow on Google News

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமிய மக்களிசை ஜோடி பாடகர்களான செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி சூப்பர் சிங்கர் – 6வது போட்டியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்கள். அந்த நிகழ்ச்சியில் செந்தில்கணேசன் முதல் இடத்தை வென்று, ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக வென்றார்.

சினிமாவில் சின்ன மச்சான் என்ற பாடலை பாடி பிரபலமான ராஜலக்ஷ்மி மேலும், பாடகி ராஜலக்ஷ்மியும் லைசென்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை கணபதி பாலமுருகன் இயக்கிவுள்ளார். இந்த படத்தில் பள்ளி ஆசிரியையாக ராஜலட்சுமி நடித்துள்ளார். தனது பாதுகாப்பிற்காக ஆசிரியை துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கிறார். அதன் பிற்கு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

இப்படி திரைப்படங்களில் நடிப்பது, திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடுவதையும் தாண்டி வெளிநாடுகளுக்கு கச்சேரிக்கு செல்லும் கிராமிய இசைக்கலைஞர் செந்தில் கணேஷின் மனைவியும் பிரபல படகியுமான ராஜலட்சுமி சமீபத்தில் வெளிநாட்டில் இசைக் கச்சேரிகாக சென்று இருந்த போது, அங்கு வசிக்கும் ஒரு நபருடன் ஆங்கிலத்தில் உரையாடினார். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ராஜலக்ஷ்மி பகிர்ந்து இருந்தார்.

மேலும் அந்த வீடியோவில் ராஜலட்சுமி மாடர்ன் உடையில் இருந்ததால் நெட்டிசன்கள் மோசமாக கமெண்ட் செய்தனர். உனக்கெல்லாம் ஜீன்ஸ் பேண்ட் கேக்குதா என்பது ஆரம்பித்து காது கொடுத்து கேக்க முடியாத அளவுக்கு மோசமான கருத்துக்களை கொண்டு ராஜலட்சுமி உருவ கேலி செய்யும் விதமாகவும் அவருடைய தன்னம்பிக்கை உடைக்கும் விதமாகவும் மோசமான கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்த ராஜலட்சுமி “ஆங்கிலம் மீது எனக்கு ஆசை இருந்தது. அதை கற்றுக் கொள்ள விரும்பினேன். அதனால் நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். ஆங்கிலத்தை நமக்குள்ளேயே பேசாமல் பொது இடங்களில் பேசினால் தவறுகள் தெரியவரும் என்பதால் நான் அந்த வீடியோவில் பேசினேன். அதற்கு மோசமாக கமென்ட் போட்டுட்டு இருக்காங்க, அடிப்படை அறிவு இல்லாதவங்கத்தான் இப்படி பேசுவாங்க.

என்னோட உடை குறித்தும் பேசி இருந்தாங்க. எது எனக்கு சரியா இருக்கோ அதை நான் போடுறேன். அதுல என்ன இருக்கு? எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு, அதை நான் கடைப்பிடிப்பேன், அந்த கமென்ட்டுகளை பார்த்துவிட்டு நான் அதே உடையில் நிறைய வீடியோக்களை பதிவிட்டேன்” என்றார். தற்போது பாடகி ராஜலட்சுமியின் இந்த வீடியோவை குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “ராஜலட்சுமி அண்மையில் அமெரிக்காவிற்கு சென்று ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு வீடியோ வெளியிட்டது குறித்து மோசமான வார்த்தையால் திட்டினார்கள். முகம் தெரியாத ஆயிரம் சைக்கோக்களின் மோசமான வார்த்தைக்கு ராஜலட்சுமியும் பதில் சொன்னது தான் வேதனையாக இருந்தது. வயிற்று எரிச்சல்: கணவன் மனைவி இருவரும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஊர் ஊராக நாட்டுப்புற பாட்டை பாடிக்கொண்டு இருந்தார்கள்.

நாட்டுப்புற பாட்டின் மீது இருந்த ஆர்வத்தால், பல அவமானத்தை தாண்டி இன்று முன்னேறி இருக்கிறார்கள். அவர்களை பாராட்டவில்லை என்றாலும் தயவு செய்து அவமானப்படுத்தாதீர்கள். இவை அனைத்தும் பொறாமையால், வயிற்று எரிச்சலால் வரும் கருத்து” என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.