ஆர்யன் கான் பிரச்சனையைத் தள்ளி வைத்து திரைப்படத்தில் கவனம் செலுத்தும் ஷாருக் கான்!

0
Follow on Google News

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் திரைப்படத்துக்கான வேலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. அட்லி தமிழில் இயக்கிய படங்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், அனைத்துமே வெற்றிப் படங்களாகவும், விஜய்யின் மார்க்கெட்டை விரிவுபடுத்துவதாகவும் அமைந்தன.

அதனால் அவர் மேல் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் பார்வை விழுந்தது. இதையடுத்து அவர் சொன்ன கதை ஷாருக் கானுக்கு பிடிக்கவே அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புதல் தந்தார். இதையடுத்து அட்லி இரண்டு வருடங்களாக அந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை தனது குழுவோடு மேற்கொண்டார்.

ஒரு கட்டத்தில் திரைக்கதை எல்லாம் முடிந்து நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகிய தமிழ் முகங்களை உள்ளே கொண்டு வந்து படப்பிடிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கினார்.
படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷாருக் கான் படப்பிடிப்புகளை அனைத்தையும் கேன்சல் செய்தார். இப்போது ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்து பிரச்சனை சூமுக நிலையடைந்துள்ளது. இதனால் இப்போது அட்லி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் அதில் ஷாருக் கான் கலந்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.