ரோகினி அப்பா மலேசியாவில் இல்லை…. கையும் களவுமாக பிடித்த முத்து… வசமாக சிக்கிய ரோகினி… சிறகடிக்க ஆசை..

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல் தான். கடந்த வாரம் சீரியலில் தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் ஏற்பாடு நடக்கிறது. இதில் ரோகிணி தன் தந்தையை வர வைக்க வேண்டும் என்று விஜயா அடம் பிடிக்கிறார். இதனால் தன்னை பற்றிய உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் ரோகிணி இருக்கிறார். இன்னொரு பக்கம் சுருதி- ரவியை தன் வீட்டிற்க்கே கொண்டு வர வேண்டும் என்று சுருதியின் அம்மா-அப்பா திட்டம் போடுகிறார்கள்.

விழாவில் முத்து சண்டைக்கு போகக்கூடாது என்று மீனா பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், ரோகினி எப்படியாவது முத்துவை குடிக்க வைத்து பங்ஷனை நிறுத்த திட்டம் போடுகிறார். ஒரு வழியாக ரோகிணி- ஸ்ருதி அம்மா விரித்த வலையில் முத்து விழவில்லை. எந்த பிரச்சனையும் இல்லாமல் பங்க்ஷன் முடிந்தது. ஆனால், ரோகினியின் அப்பா வரவில்லை என்று விஜயா பயங்கரமாக ரோகினியை திட்டி விடுகிறார்.

மீனா, ஸ்ருதி ரூமிற்கு செல்கிறார். அங்கு ஸ்ருதி கீழே போட்டு இருக்கும் மாலையை மீனா எடுத்து பார்க்கிறார். அப்போது மாலையில் தங்க செயின் இருப்பதை பார்த்து மீனா எடுக்கிறார். உடனே ரூமிற்கு வந்த சுருதி அப்பா, திருடி என்ன வேலை செய்கிற? இதுதான் உன் வேலையா? என்று மீனாவை மோசமாக பேசுகிறார். பின் அனைவர் முன்னாடியும் மீனாவை அசிங்கப்படுத்துகிறார்.

ஆனால் மீனா, நான் அதை செய்ய திருடவில்லை, சுருதியிடம் கொடுக்கப் போனேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார். பின் முத்து- ஸ்ருதின் அப்பாவிற்கு அடிதடி அளவிற்கு சண்டை செல்கிறது. இந்த நிகழ்வுக்கு பின்பு வீட்டிற்கு வந்த முத்து- மீனாவை பார்த்த விஜயா, வெளியே போங்க! நீங்கள் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. நீங்கள் இல்லை என்றால் தான் சுருதி- ரவி வீட்டிற்கு வருவார்கள் என்று சொல்கிறார்.

அதற்கு முத்து, சரி நாங்கள் கிளம்புகிறோம். நீங்களும் எங்களுடன் வாங்கப்பா என்று முத்து சொன்ன உடன் அண்ணாமலையும் முத்துவுடன் கிளம்ப பார்க்கிறார். உடனே விஜயா, அண்ணாமலை தடுக்க நினைக்கும் போது நான் என் மகன் கூப்பிட்டால் அவனுடன் போகத்தான் செய்வேன் என்று சொல்லுகிறார். இதற்கு விஜயா என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக நிற்கிறார்.

பிறகு எல்லோரும் சாப்பிட உட்காரும்போது முத்து யாரோ மலேசியாவில் இருந்து இப்ப வந்துருவாங்க இன்னும் கொஞ்சம் கழிச்சு வந்துருவாங்கன்னு சொல்லிட்டே இருந்தாங்க, அவங்க இன்னுமா வந்து சேரல என்று ரோகிணியை மாட்டி விடுகிறார். உடனே விஜயா ஆமா உங்க அப்பா இன்னும் வரலையா? அவர் வந்தாரா இல்லையா? இப்படியே பொய் சொல்லிட்டு இருக்கியா என்று கேள்வி மேல் கேட்கிறார்.

பதில் பேச சொல்ல முடியாமல் ரோகிணி தவித்து போய் வாயில் சாப்பாடு வைத்ததும் வாமிட் வர, அதை பார்த்து ரோகினி விஜயா ரோகினி கர்ப்பமாக இருப்பதாக நினைத்து, என் தங்கம் நான் நினைச்ச மாதிரியே நடந்துச்சு என்று சொல்லி மனோஜியை பாராட்டுகிறார். அதற்கு அண்ணாமலை எதையும் நாமாக நினைத்து சந்தோஷப்பட வேண்டாம் முதலில் ஹாஸ்பிடலுக்கு போய் செக் பண்ணி வரட்டும் என்று சொல்கிறார்.

இதில் ரோகினி அப்பா மலேசியாவில் இருந்து வந்தாரா.? இல்லையா.? என்பதை விஜயா மறந்து விடுகிறார், ஆனால் முத்துவுக்கு ரோகினி மீது பலத்த சந்தேகம் ஏற்படுகிறது, தொடர்ந்து இனி வரும் அடுத்தடுத்து நாட்கள், எப்படி மனோஜை பார்க்ல தூங்கினது குத்தி குத்தி காண்பித்து வருகிறாரோ.? அதே போன்று ரோஹிணியை ஜாடை மாடையாக எங்கப்பா மலேசியால இருந்து வராரு சொன்ன அப்பாவா காணோம் என கிடைக்கிற கேப்பில் முத்து தொடர்ந்து ரோஹிணியை சீண்டும் காட்சிகள் வர இருக்கிறது.