நவம்பர் 19 ஆம் தேதி ரிலிஸ்… ஒதுங்கிய 2 படங்கள் !

0
Follow on Google News

தீபாவளிக்கு அண்ணாத்த படம்தான் கிட்டத்தட்ட எல்லா திரையரங்குகளிலும் வெளியானது.
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் பல நட்சத்திரங்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகும். திரையரங்குகளும் விழாக்கோலம் காணும். ஆனால் இப்போதெல்லாம் பண்டிகை நாட்கள் என்றால் அது பெரிய நடிகர்களின் படங்களுக்கு என்று ஒதுக்கிவிட்டார்கள்.

இந்த ஆண்டு தீபாவளிக்கே சிம்புவின் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் அண்ணாத்த படத்துக்கே கிட்டத்தட்ட எல்லா திரைகளும் ஒதுக்கப்பட்டதால் நவம்பர் 25 ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. எனிமி தயாரிப்பாளர் மற்றும் அழுது புரண்டு சில திரைகளைப் பெற்று அண்ணாத்த படத்தோடு மோதினார். ஆனால் இரு படங்களுமே ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.

தீபாவளிக்கு பின்னர் பெய்த கனமழை வேறு வசூலை பாதித்துள்ளது. இதனால் அடுத்தடுத்த வாரங்களில் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. வரும் வெள்ளிக்கிழமை 5 படங்கள் ரிலிஸாக இருந்தன. ஆனால் அதில் அருண் விஜய்யின் பார்டர் மற்றும் சாந்தணுவின் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்கள் தங்கள் வெளியீட்டை பின் தள்ளி வைத்துள்ளன. இதனால் இந்த வாரம் சந்தானத்தின் சபாபதி, ஜாங்கோ மற்றும் கடேசில பிரியாணி ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.