நடு ராத்திரியில எழுப்பி… அதை பண்ண சொல்லுவார்… கணவர் கொடுக்கும் தொல்லை… புலம்பிய நடிகை மகாலக்ஷ்மி..

0
Follow on Google News

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் சீரியல் நடிகைகளுமான மகாலட்சுமி கடந்த வருடம் திருப்பதியில் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டார். அதேபோன்று ரவீந்திரனும் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து செய்தவர். ஆகையால் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.

இவர்கள் திருமணம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை விட அதிகம் பேசப்பட்டது மகாலட்சுமி – ரவீந்திரன் திருமணம். இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன் அதிகம் உள்ள ரவீந்திரனை நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது தான். ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி திருமணம் கேலி கிண்டலுக்கு உள்ளானாலும் இதையெல்லாம் இந்த தம்பதியினர் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

அடிப்படையில் கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்த ரவீந்திரன் பெரும் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பதால் தான், அவருடைய உடல் பருமனை பொருட்படுத்தாமல் கூட மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டார் என்கிற விமர்சனம் எழுந்தது. இருந்தும் தங்களுக்கு எதிராக வரும் எந்த ஒரு விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் ஹனிமூன், குலதெய்வ வழிபாடு என செம்ம ஜாலியாக இருந்து வந்தனர் மஹாலக்ஷ்மி – ரவீந்திரன் தம்பதியினர்.

தொடர்ந்து தன்னுடைய உருவ கேலி குறித்து கிண்டல் செய்பவர்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ரவீந்திரன், என்னுடைய உருவத்தைப் பற்றி கேலி கிண்டல் செய்பவர்களுக்கு, நான் பதில் அளித்து என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என தெரிவித்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர்.மேலும் திருமணத்திற்கு பின்பு உணவு டயட் செய்து, ஜிம்முக்கு சென்று உடல் பயிற்சியின் மூலம் உடலை குறைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

காதலிக்கும் போது மஹாலக்ஷ்மி உடனான டேட்டிங் பற்றி பேசிய ரவீந்திரன். நாங்கள் காதலித்துக் கொண்டிருக்கும் போது மகாலட்சுமி இரவில் டேட்டிங் அழைப்பார். ஆனால் வெளியில் இருவரும் ஒரே ஓட்டலில் தங்குவது தெரிந்து விட கூடாது என்பதற்காக தவிர்த்து வந்தேன். மேலும் இருவரும் டேட்டிங்காக ஒரு ஹோட்டலில் தங்கினால், அது வெளியே தெரிந்து, அதனால் மகாலட்சுமி விமசனத்துக்கு உள்ளாகி, ஒரு பெண்ணாக பாதிக்கப்படுவார் என்பதற்காக தவிர்த்தேன் என தெரிவித்து இருந்தார் ரவீந்திரன்.

இந்நிலையில் என்ன தான் ரவீந்திரன் உடல் பருமன் குறித்து கேலி செய்தாலும் கூட இருவரும் கொடுக்கும் பேட்டிகள் மூலம், இருவருக்கும் இடையிலான காதல் மிக அழமாக இருந்தது. இந்நிலையில் மகாலக்ஷ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் இரவில் செய்யும் அட்ராசிட்டி குறித்து சில விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதில் கணவர் ரவீந்தரின் உடல் எடையை குறைக்க நாங்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்தோம். ஆனால் அவர் டயட்டை சரியாக கடைபிடிக்கவே மாட்டார். மேலும் அவருடன் நான் இருப்பதால் என்னையும் ஒழுங்காக டயட் பாலோவ் செய்ய விடமாட்டார் என தெரிவித்த மகாலக்ஷ்மி. நடுராத்திரியில் கூட என்னை எழுப்பி சாப்பிட வைக்கிறார்.

நான் பெரும்பாலும் அதிகமாக சாப்பிடமாட்டேன். ஆனால், இறங்கிவிட்டால் வயிறுமுட்ட சாப்பிட்டுவிடுவேன். எனவே அவரும் சரியாக உடலை மெயின்டைன் செய்வது கிடையாது. என்னையும் அப்படி செய்ய விடுவதில்லை என கூறி மகாலக்ஷ்மி புலம்பியுள்ளார், அந்த வகையில் நடு ராத்திரி என்று கூட பார்க்காமல் மனைவியை எழுப்பி சாப்பிடும் ரவீந்திரன் சாப்பாடு விஷயத்தில் ரெம்ப மோசம் தான் என மகாலக்ஷ்மி இந்த பேட்டியை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.