விக்ரம் – ஜெயம் ரவி உச்சக்கட்ட மோதல்… பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் அதிக செலவில் எடுக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் பொன்னியின் செல்வன்.இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம். ஜெயம் ரவி, கார்த்திக், சரத்குமார், விக்ரம் பிரபு மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதையை விக்ரமிடம் மணிரத்தினம் சொன்ன போது விக்ரம் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது போன்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்பு தான் விக்ரம் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். படம் தற்பொழுது எடுத்து முடிக்கப்பட்டு நிலையில், இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு முக்கியத்துவம் கொடுத்து,இது ஜெயம் ரவிக்கான படம் என்பது போன்று உருவாகியுள்ளதால், படத்தின் இயக்குனர் மணிரதத்தினம் மற்றும் ஜெயம் ரவி மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார் விக்ரம்.

இதனால் கடும் கோபத்தில் இருந்த விக்ரம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவை புறக்கணிக்க முடிவு செய்து, அன்றய தினத்தில் உடல்நிலை சரியில்லை என தெரிவித்து திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆனார் விக்ரம்.தொடர்ந்து பொன்னியின் செல்வன் அடுத்தடுத்த பிரமோஷன் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்த விக்ரமை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் மணிரத்தினம்.

இருந்தும் தான் நடிக்கும் கோப்ரா படத்தில் பிசியாக இருப்பதால், பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என தட்டி கழித்து வந்த விக்ரம். இது ஜெயம் ரவிக்கான படம் அதனால் அவரை வைத்தே இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்துங்க என விக்ரம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஜெயம் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டால், ஜெயம் ரவி படத்தில் நான் நடித்துள்ளேன், என்பது போன்று அமைந்துவிடும் என விக்ரம் தெரிவிக்க. அதற்கு ஒரு கட்டத்தில் எப்படியாவது விக்ரமை ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைப்பதற்காக, ஹைதராபாத்தில் நடக்கும் சிக்கில் டீசர் வெளியிட்டு விழாவில் ஜெயம் ரவி கலந்து கொள்ள மாட்டார், இது உங்களுக்கான நிகழ்ச்சி என இயக்குனர் தரப்பு உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்பு தான் ஹைதராபாத்தில் நடந்த பொன்னியின் செல்வன் சிங்கிள் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொண்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்து நடக்கும் புரொமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த மேடையில் இருவரும் பங்கேற்கும் வகையில் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது

ரஜினியால் கடனாளியான தனுஷ்… கடனை அடைக்க என்ன செய்தார்  தனுஷ் தெரியுமா.?