எவனோ கிளி கிளினு கிளிச்சுட்டான் போல..வடிவேல் போல் யாருக்கோ நடந்தது போல் கதறும் ராஜலக்ஷ்மி வறுத்தெடுத்து மக்கள்..

0
Follow on Google News

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினர், இவர்கள் பிரபலம் ஆவதற்கு காரணம் என்னோமோ கிராமிய பாடல்கள் அழிவின் விளிம்பில் இருப்பது போன்றும், அதை காக்க வந்தவர்கள் தான் செந்தில்- ராஜாலட்சுமி தம்பதியினர் என விஜய் டிவி கொடுத்த பில்டப் தான் என பரவலாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரம்ப கட்டத்தில் பவ்யமாக இருந்த ராஜலக்ஷ்மி ஒரு கட்டடத்துக்கு மேல் இவரின் ஆட்டம் எல்லை மீறியது.

இதனால் ராஜலட்சுமியை ஒரு கட்டத்தில் ஆதரித்தவர்கள் எதிர்க்க தொடங்கினர். மேலும் பின்னணி பாடகிகள் சுசிலா, ஜானகி, சித்ரா போன்ற ஜாம்பவான்கள் கூட ராஜலக்ஷ்மி அளவுக்கு ஓவர் ஆட்டம் போடவில்லை என விமர்சனம் செய்யும் அளவுக்கு ராஜலக்ஷ்மியின் பேச்சுக்கள் அமைந்தது. வடிவேலு நகைசுவை காட்சிகளில் வருவது போன்று, நான் சுத்தி வளச்சி பேச விரும்பவில்லை எதிர்க்கட்சி காரனை பார்த்து கேட்கிறேன்.

என்ன பண்ணினான் என் கட்சிக்காரன் ஏதோ ஒரு போன ராங்கா போட்டுட்டான். ராங் நம்பனா சாரி சொல்லிட்டு வைக்க வேண்டியதுதானே, அதை விட்டுட்டு 50 பேர் சேர்ந்து ஆட்டோவில் வந்து என் கட்சிக்காரன் துவை துவை என்று துவைத்து வச்சிருக்கீங்க என வடிவேலு மேடையில் பேசும்போது, மாப்பிள்ளை இவன்தான் எங்கேயோ செமத்தியா வாங்கி இருக்கான். இங்க வந்து வேற எவனோ வாங்குவது போல அவுத்து விடுறான் என கீழே இருப்பவர் பேசுவார்.

அதுபோல் ராஜலக்ஷ்மி அறிவுரை வழங்குவது போல் பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், அதில், நம்மைப் பற்றி அவதூறாக பேசுவது எப்போது என்று நீங்கள் யோசிதிர்கள் என்றால், நம்ம எந்த நிலையில் இருக்கிறோமோ. அதே நிலையில் இருக்கும் வரை நம்மை யாரும் அவதூராக பேசமாட்டார்கள். உதாரணத்துக்கு என்னைக்கு ஒரு சிங்கர் ஆக இருக்கின்றவர்கள் ஒரு சேனலில் சென்று வாய்ப்புகள் தேட போகிறார்களோ அன்னைக்குத்தான் தவறான விமர்சனங்கள் தொடங்கும்.

உங்கள் மீது அவதூறான விஷயங்கள் வரும்போது நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், இப்பதான் நீங்கள் உங்கள் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர ஆரம்பித்து உள்ளீர்கள். அதனால்தான் உங்களைப்பற்றி அவதூறு பேசுகிறார்கள் என ராஜலக்ஷ்மி அறிவுரை வழகியுள்ளது குறித்து வலைதளவாசிகள், இது தான் எங்கேயோ செமத்தியா வாங்கி இருக்கு. இங்க வந்து வேற எவனோ வாங்குவது போல அவுத்து விடுது என்றும்.

அறிவுரை வழக்கு தகுதி வேண்டும், நீயெல்லாம் அறிவுரை அளவுக்கு உள்ளது காலம், எவனோ கிளி கிளினு கிளிச்சுட்டான் போல, இது தான் எங்கேயோ செருப்படி வாங்கிருக்கு, மிக பெரிய பாடகர் மத்தியில் உங்களை வளர்த்து விட்டா இன்னைக்கு என்னடான்னா தத்துவம் பேசுற. என பொது மக்கள் சமூக வலைதளத்தில், பாடகி ராஜலட்சுமியை வெளுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மோடியை பஞ்சாபில் போட்டு தள்ள ஏற்கனவே நடந்த ஒத்திகை..! வெளியானது அதிர்ச்சியளிக்கும் எஸ்பிஜி ரிப்போர்ட்..!