கவிஞர், மண்ணாஙட்டி என்று.. பிறந்த குழந்தையை கூட விட மாட்டார்கள்..சின்மயி ஆவேசம்..

0
Follow on Google News

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜ., எம்பி.,யும் ஆன பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்து தொடர் போராட்டங்களை நடந்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரத்தில் சினிமா பின்னணி பாடகி இதுவரை வாய் திறக்கவில்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிட்ட ஒரு கட்சியை சேர்ந்தவர் என்பதாலே சின்மயி மௌனமாக இருக்கிறார் என்கிற விமர்சனமும் எழுந்தது. இதனை தொடர்ந்து இது குறித்து கோபத்துடன் பதிலளித்துள்ள சின்மயி. அறிவு இருந்து ஆங்கிலம் படிக்க தெரிஞ்சா பல நாளா ட்விட்டர்ல இந்திய மல்யுத்த வீராங்கனை பாலியல் விவகாரம் பற்றி குரல் கொடுத்து வருகிறேன் என்பது தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இந்திய வீராங்கனை PT உஷா குறித்து கேவலமா பேசி, ரேப் அபாலஜிஸ்ட் கமெண்ட் பண்ணுனதுக்கும் கண்டனம் தெரிவிச்சேன்.

ஏன் டா இந்த விவகாரத்தில் பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன் சிங் ஹிந்திக்காரன். ஒட்டுமொத்த இந்திய மீடியாவுக்கு புரியணும்னா ஆங்கிலத்துலதான் பதிவிடணும். இங்க இருக்க பாலியல் குற்றவாளிகளுக்கு நலச்சங்கம் நடத்திட்டு, ‘ஏன் மீ டூ மாமி எதுவும் சொல்லலன்னு வந்து கேட்டா?’ தமிழ்ல பதிவிட்டா என்ன லாபம்டா கூமுட்டைங்களா?

ஆமா… பல ஆண்டுகளா உங்க சமுதாயத்தின் உள்ள பாலியல் குற்றவாளிக்கு துணை போயிட்டு, இப்ப என்ன, திடீர்னு, பெரிய்ய ஒழுங்கு பருப்பு மாதிரி பாலியல் குற்றங்களுக்கு குறல் கொடுக்குராப்ல நடிப்பு.? உங்க ரத்த பந்தம், உடன்பிறப்பு, பங்காளி, கவிஞர், மண்ணாஙட்டி, தெருப்புழுதி எல்லாம் சேர்ந்து ஒரு குழந்தைய ரேப் பண்ணாலும், ரேப் செய்ய பட்ட குழந்தையின் ஜாதியென்ன? பிடிக்காத கஜாதின்னா ரேபிஸ்ட்டுக்கு முட்டுகுடுக்குற பிறவிங்கதானே இங்க பல பேரு?

நான் ட்விட்டர்ல பதிவிட்டதை பற்றி இங்க இருக்கும் ரேப் அபாலஜிஸ்ட் மொகறைக்கு தெரிய வாய்ப்பில்ல. பாதி நேரம் தமிழ் நாட்டு பாலியல் குற்றவாளிக்கு விளக்கு பிடிச்சுட்டு இருக்க இவனுங்களுக்கு அத விட்டுட்டு வேர எதுக்காச்சும் நேரம் ஒதுக்குனாத்தானே தெரியும்? இல்லைன்னா எப்படி தெரியும்? என் வாழ்க்கை முழுக்க, உலகமெங்கும் சொல்லிட்டேத்தான் இருப்பேன், இந்த நாட்ல இருக்கவங்க முக்காவாசி ரேப் அபாலஜிஸ்ட் தான்.

பாலியல் குற்றம் நடந்தால், துபட்டா போடல டைட்ஸ் போட்டா இப்படித்தான் அப்டீன்னு சொல்ற, தரித்ர கூமுட்டைங்கள ரேப் அபாலஜிஸ்ட் என்று சொல்வார்கள். உலகில் முக்கால்வாசி தமிழர்களின், இந்தியர்களின் பிரதான மனப்பான்மை ரேப் அபாலஜி தான். அப்பவே ஏன் சொல்லல? நீ ஏன் இடம் குடுத்த? காசுக்காக சும்ம இருந்த? பப்லிஸிடிக்காக பேசுறா. அப்டீன்னு நாதாரித்தனமா உளரும் எச்சைங்க;

நாம இப்ப முட்டுக்குடுப்போம் அப்பத்தான் நம்மள பத்தி என்னிக்காச்சும் உண்மை வெளிய வந்தா நமக்கு முட்டு குடுப்பாங்கன்னு சுத்துற கும்பல் இங்க. பாகிஸ்தான்ல பெற்றோர்கள் அவர்களின் இறந்த மகள்களின் கல்லறையகள பூட்டு போட்டு பூட்டறாங்களாம். ஏன்னா புதைச்ச சில மணி நேரத்துல இறந்த பெண்ணோட உடல வெளிய எடுத்து ரேப் பண்ணிட்டு இருக்காங்களாம்.

பிறந்த குழந்தைங்கள கூட சும்மா விட மாட்டாய்ங்க. diaper பாத்து excite ஆனதால ரேப் பண்ணிட்டான்னு சொல்ற மக்கள் தான் நிறைய்ய பேர். ஆகையனால நான் இங்க பல பேர ரேப் அபாலஜிஸ்ட்ன்னு சொல்றேன். சின்மயி தன்னுடைய கோபத்தை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.