ராஜலக்ஷ்மி பற்றி வேதனையுடன் புட்டு புட்டு வைத்த அவரது உறவினர்…

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்கள் செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர். இவர்கள் எந்த அளவுக்கு மிக குறுகிய காலத்தில் மிக பிரபலமாக அறியப்பட்டார்களோ, அதே அளவுக்கு அவர்களை சுற்றி அடிக்கடி சர்ச்சைகளும் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். கிராமிய பாடகராக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பெற்ற வெற்றியின் மூலம், ஓவர் நைட்டில் ஒபாமா ஆனது போன்று, அடுத்தடுத்து சினிமாவில் பாடல் படும் வாய்ப்பு, வெளிநாடு கச்சேரி என ரெம்ப பிஸியான தம்பதியினராக வலம் வந்தவர்கள், அவ்வப்போது விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு விருத்தினராகவும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்து சில வருடங்களுக்கு முன்பு நாட்டு புறபாடகி மதுரமல்லி கிராமிய பாடகர்கள் செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் மீது பரபரப்பு குற்றசாட்டை வைத்தார்.

நாட்டுபுறப் பாடகி மதுரமல்லி பாடிய பாடலை, செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர், தாங்கள் இயற்றிய பாடல் என நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக வீடியோ ஒன்றை பார்த்த மதுர மல்லி, இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அந்த வீடியோவில், ‘நான் எழுதி, இசையமைத்து பாடிய பாடலை, யாரோ ஒருவர் பாடியதாக, ராஜலட்சுமி நிகழ்ச்சி மேடையில் பேசியிருப்பது அசிங்கமாக உள்ளது என தெரிவித்த மதுரமல்லி.

மேலும் ராஜலக்ஷ்மியின் இந்த செயல் மனசு வலிக்கிறது. ராஜலட்சுமியின் இந்த கருத்தை வாபஸ் பெறாவிட்டால், நான் தற்கொலை செய்துக் கொள்வேன்’, என பகிரங்கமாக பேசியிருந்தார் பாடகி மதுர மல்லி. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த ராஜலட்சுமி, யூடியூப் சேனலில் தனது கருத்தை எடிட் செய்ததன் விளைவாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக விளக்கம் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஏற்கனவே பாடல் திருட்டு சர்ச்சையில் சிக்கிய ராஜலக்ஷ்மி தற்பொழுது மீண்டும் பாடல் திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல நாட்டுப்புற பாடகர் அந்தோனிதாஸ், இவர் சினிமாவில் சில பாடல்கள் பாடியுள்ளார், மேலும் நடிகராகவும் நடித்துள்ளார், அந்தோனிதாஸ் கொழுந்தியா தான், பாடகி ராஜலக்ஷ்மி செந்தில், அதாவது அந்தோணிதாஸ் மனைவியின் தங்கை தான் ராஜலக்ஷ்மி.

இந்நிலையில் அந்தோணிதாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், என்னுடைய மனைவி எழுதிய பாடலை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் பாடினார்கள், அந்த பாடலை பாடியதின் மூலம் மிக பெரிய பெயரையும் புகழையும் பெற்ற ராஜலக்ஷ்மி செந்தில் தம்பதியினர்,எந்த ஒரு இடத்திலும் இந்த பாடலை எழுதியது தன்னுடைய சகோதரி தான் என்று தன்னுடைய மனைவி பெயரை இவர்கள் குறிப்பிடவில்லை என வருத்தப்பட்ட அந்தோனிதாஸ்.

இதனால் எனது மனைவி எழுதிய பாடல், ராஜலக்ஷ்மி செந்தில் அவர்களுடைய படலாகிவிட்டது, என்றும், எங்கள் அடையாளங்களை வாங்கி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த காலத்தில் பாடலை எழுதியவர்கள் யார் என்பது மறைக்கப்படுகிறது என வேதனையுடன் அந்தோனிதாஸ் தெரிவித்துள்ளது தற்பொழுது மீண்டும் ராஜலக்ஷ்மி செந்தில் தம்பதியினர் பாடல் திருட்டு சர்ச்சையில் சிக்கி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது குறிப்பிடதக்கது.