லியோ படத்தில் நடித்த தொழிலார்களை இன்சல்ட் செய்த விஜய்…. தொழிலார்கள் என்றால் அவ்வளவு இழிவானவர்களா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் பற்றி இதற்கு முன்பு பல நடிகர்கள் விஜய்யால் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களை பகிரங்கமாக தெரிவித்து இருந்தார்கள், நடிகர் ராதாரவி இதற்கு முன்பு பேட்டி பேசுகையில், என் பேரன் விஜய்யின் தீவிர ரசிகர். அவர் விஜய்யை பார்க்கவேண்டும் என கூறினான். அதனால், ஒரு நாள் குடும்பத்துடன் அழைத்துச்சென்றேன். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

இது எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அதன் பின்பு சர்கார் படத்தில் விஜயுடன் நடித்திருந்தேன். இதற்கு விஜய்-யை நேரில் சந்தித்து நன்றி சொல்ல அனுமதி கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால், விஜய்யின் உதவியாளர் போனை எடுத்து அதற்கு சம்மதம் சொன்ன விதம் தான் ராதாரவியை மனமுடைய செய்திருக்கிறது. ”வாங்க, ஆனால் அன்று போல கூட்டத்தை கூட்டிட்டு வந்துடாதீங்க” என்று விஜயின் உதவியாளர் ராதாரவியிடம் சொல்லியிருக்கிறார்.

எட்டு வருடத்திற்கு முன்பு ராதாரவி அழைத்து சென்றது அவரது குடும்பத்தை, அவர் குடும்பத்தை கூட்டம் என்று விஜயின் உதவியாளர் அநாகரீகமாக பேசியதால் மனமுடைந்து போயுள்ளார் ராதாரவி, அவர் பேசிய வார்த்தைக்குப் பிறகு ராதாரவி விஜையை சந்திக்க போகவே இல்லையாம்.அன்று முதல் விஜய் வீட்டு பக்கமே போவதில்லை என தன்னுடைய குடும்பத்தை கூட்டமாக வரவேண்டாம் என குடும்பத்தை கூட்டம் என்று தெரிவித்தது மிக பெரிய வேதனையை கொடுத்ததாக ராதாரவி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். தொடர்ந்து இடைவிடாமல் லியோ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்ததற்கு அந்த படத்தில் பணியாற்றிய லைட் மேன், மேக்கப் மேன் என ஒவ்வொரு ஊழியரும் முக்கிய காரணம். இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், நடிகை திரிஷா மற்றும் விஜய் இருவரும் தனியாக போட்டோ ஷுட் எடுக்கப்பட்டனர்.

இவர்கள் போட்டோ ஷூட் முடிந்ததும் அடுத்து லியோ படத்தில் பணியாற்றிய லைட்மேன் முதல், மேக்கப் மென் வரை இரவு பகல் பாராமல் உழைத்த அணைத்து தொழிலாளிகளுடன் விஜய் குருப் போட்டோ எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இந்த விஷயத்தை நடிகர் விஜய்யிடம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார்கள்.இந்நிலையில் விஜய் உடன் குரூப் போட்டோ எடுக்க இருப்பதால், லியோ படத்தில் பணியாற்றிய பெரும்பாலான தொழிலாளிகள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை திரிஷா உடன் மிக மகிழ்ச்சியாக போட்டோ ஷூட்டை முடித்துவிட்டு, அடுத்து லியோ பட குழுவினருடன் விஜய் புகைப்படம் எடுக்க தயராக இருந்தது. இந்நிலையில் புகைப்படம் எடுக்க விஜய் வருகைக்காக அனைவரும் ஆவலாக காத்திருந்த நிலையில், குருப் போட்டோ எடுக்கும் இடத்திற்கு வந்த விஜய், எதுவுமே பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டாராம்.

இதனால் விஜய் உடன் குருப் போட்டோ எடுக்க காத்திருந்த லைட் மேன், முதல் வாகன ஓட்டுநர் வரை, என அனைத்து தொழிலாளர்களும் மிக பெரிய ஏமாற்றம் அடைத்தனர். இந்நிலையில் விஜய்க்கு என்னாச்சு, ஏன் வந்த உடனே எதுவுமே பேசாமல் சென்றுவிட்டார் என பலரும் குழம்பி போக, அதன் பின்பு தான் விஜய்க்கு கூட்டமாக இருந்தால் பிடிக்காதாம், அதனால் தான் இதுவும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே நடிகர் ராதாரவியை தன்னை சந்திக்க கூட்டமாக வரவேண்டாம் என குடும்பதிரை விஜய் தரப்பில் தெரிவித்து இருந்த நிலையில், தற்பொழுது இரவு பகல் பாராமல் லியோ படத்தில் உழைத்த தொழிலாளிகளை கூட்டமாக பார்தததும் அப்செட்டாகி புறப்பட்டு விட்டார் என கூறப்படுகிறது.