விஜய் குடும்பத்தில் சடுகுடு விளையாடும் புஸ்ஸி ஆனந்த்… செம்ம டென்சனின் ஒட்டு மொத்த குடும்பம்..

0
Follow on Google News

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எப்படி சசிகலாவோ, அதேபோன்று இன்று நடிகர் விஜய்யின் அனைத்து நகர்வுகளுக்கும் நிழல் ஆக செயல்பட்டு வருகின்றனர் புஸ்ஸி ஆனந்த் என்று சொல்லும் அளவிற்கு பல சம்பவங்கள் அரங்கேறி வருவதை பார்க்க முடிகிறது.நடிகர் விஜய் சந்தித்து அவருடைய ரசிகர்கள் அவரிடம் காலில் விழுவது பெரிய விஷயம் அல்ல, ஆனால் புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் காட்சிகளும் அரங்கேறி வருவது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது இல்லாமல் விஜயின் நிழலாக வரும் புஸ்ஸி ஆனந்தின் பின்னணி என்ன என்கின்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் விஜயுடன் நிரந்தரமாக புஸ்ஸி ஆனந்த் பயணிப்பார் என்றால் அதுவும் மிகப்பெரிய சந்தேகம் தான் என்பது விஜயின் கடந்த கால சம்பவங்களே சாட்சி. விஜய் உடன் ஆரம்ப காலகட்டத்தில் பயணித்தவர்களில் அவருடைய கார் டிரைவர் ராஜேந்திரன் மட்டும் தான் இன்றளவும் விஜயுடன் பயணித்து வருகிறார்.

ஆனால் விஜய் நடிக்க வந்த காலத்தில் இருந்து விஜய் மிகப்பெரிய உச்சகட்ட நடிகராக வரும் வரை அவருடன் பயணித்த சுமார் 6, 7 நபர்களை விஜயை நெருங்க கூட முடியாத அளவிற்கு அவர்களை ஒதுக்கி வைத்து விட்டார் விஜய். தன்னுடன் நீண்ட வருடமாக பயணித்தவர்களை விஜய் ஒதுக்கி வைத்தது போன்ற நிலைமை புஸ்ஸி ஆனந்த்க்கு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் விஜயின் நடவடிக்கைகளை நன்கு அறிந்தவர்கள்.

குறிப்பாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஜே சந்திரசேகர் மற்றும் அவரது மகன் விஜய்க்கு இடையிலான பிரச்சனை தொடர்ந்து இருந்து வரும் வரை மட்டும்தான் விஜய்க்கு அருகிலே புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து நீடிப்பார். ஆனால் ஒரு கட்டத்தில் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்ஸே சந்திரசேகருக்கும் இடையிலான பிரச்சனை, ஒரு வேலையை சமூகமாக முடிந்து, விஜய்யும் அவருடைய தந்தையும் இணையும் பட்சத்தில், எஸ் ஏ சந்திரசேகர் முதலில் கட்டம் கட்ட இருப்பது புஸ்ஸி ஆனந்த் தான்.

அந்த அளவுக்கு புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இருந்து வருவதாக கூறப்படுகிறது, ஆரம்பத்தில் புஸ்ஸி ஆனந்த்தை விஜயுடன் அறிமுகம் செய்து உள்ளே கொண்டு வந்ததே விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான் என்றும். ஆனால் புஸ்ஸி ஆனந்த் விஜயிடம் வந்த அடுத்த சில காலங்களிலேயே விஜய் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகரை ஒதுக்கி வைப்பதற்கு பின்னணி காரணமாக இருந்தவரும் புஸ்ஸி ஆனந்த் தான் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் தன்னுடைய மகன் தவறான நபர்களின் ஆலோசனை கேட்டு, தவறான முடிவை எடுத்து வருவதாக கடும் கோபத்தில் இருக்கும் எஸ்ஏ சந்திரசேகர், குறிப்பாக தவறான முடிவுகள் விஜய் எடுப்பதற்கும் தவறான யோசனைகளை வழங்கி வரும் புஸ்ஸி ஆனந்த் மீதுதான் கடும் கோபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இனிவரும் காலத்தில் எஸ்ஏ சந்திரசேகரும் அவருடைய மகன் விஜயிம் ஒன்று சேரும்பொழுது விஜய்யிடம் இருந்து புஸ்ஸி ஆனந்த் கட்டம் கட்டி வெளியேற்ற படலாம் என்றும். அதே நேரத்தில் விஜய் குடும்பத்தில் நடக்கும் அனைத்தும் பிரச்சனைக்கும் விஜய் பின்னணியில் இருந்து செயல்படுவது புஸ்ஸி ஆனந்த் தான் என்கின்ற கோபம் விஜய் குடும்பத்தினருக்கும் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில்.

தந்தை மீது மகன் தொடர்ந்து பல நாட்கள் கோபத்தில் இருக்க முடியாது. நிச்சயம் ஒரு நாள் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும், அப்போது தந்தை மகனுக்கும் இடையிலான பிரச்சனை முடிந்து குடும்பம் ஒற்றுமையாகும் பொழுது. புஸ்ஸி ஆனந்த்தை விஜயின் ஒட்டுமொத்த குடும்பமும் கட்டம் கட்டி வெளியேற்ற படலாம் என்றும் கூறப்படுகிறது.