பாலா-முத்துமலர் வாழ்க்கையை நாசம் செய்த அந்த வாழ்த்து செய்தி .! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் குடும்ப நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்னனர். இவர்கள் விவாகரத்து சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆரம்பத்தில் இயக்குனர் பாலா ஒரு சைக்கோ மனிதர், அவருடன் இத்தனை வருடம் அவர் மனைவி முத்துமலர் வாழ்ந்து வந்ததே பெரிய சாதனை என்று விமர்சனம் எழுந்தது.

ஆனால் இவர்கள் விவாகரத்துக்கு முக்கிய கரணம் முத்துமலர் தான் என்பது பின்பு தெரிய வந்தது. முத்துமலர் மதுரை அருகே உள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்தவர், அதே மாவட்டத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரின் மகனிடம் கல்லூரியில் படிக்கும் போதே நெருங்கி பழகி வந்துள்ளார், இதன் பின்பு பாலாவை திருமணம் செய்து கொண்ட பின்பு அந்த அரசியல் தலைவரின் மகனிடம் எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருந்து வந்துள்ளார்.

ஆனால், அந்த அரசியல் தலைவரின் மகன் கடந்த நான்கு வருடத்துக்கு முன்பு அரசியல் பிரவேசம் எடுத்து, தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளார். இதன் பின்பு தான் முத்துமலர் பார்வை மீண்டும் கல்லூரியில் தன்னுடன் நெருக்கமாக இருந்த அந்த அரசியல் வாரிசு மீது விழுந்துள்ளது. கல்லூரியில் இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த போது இவர்கள் நட்பு வட்டாரத்தில் இருந்தவர்களில் சிலர் தற்பொழுது வரை முத்துமலர் உடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அப்படி தன்னுடன் தற்பொழுது வரை நட்பில் இருந்து வருகின்றவர் மூலம் அந்த அரசியல் வாரிசுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் முத்துமலர். இதன் பின்பு தான் இருவருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழைய நினைவுகளை அசைவு போட்டு நினைத்து பார்த்த அந்த அரசியல் வாரிசு மீண்டும் முத்துமலருக்கு கொக்கி போட தொடர்ந்து அவருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.

முத்துமலரும் அடிக்கடி தனியாக அந்த அரசியல் வரிசை சந்தித்து வந்துள்ளார். இதன் பின்பு மீண்டும் பழைய காதல் இவர்கள் இருவருக்கு பற்றி கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பின்பு இருவரும் தமிழகத்தில் சந்தித்து லூட்டி அடித்தால் பெரும் சர்ச்சையாகி விடும் என்பதால், டெல்லியில் உள்ள சொகுசு ஓட்டலில் தனிமையில் இருந்துள்ளதாகவும், மேலும் அடிக்கடி வெளிநாடு சென்று இருவரும் அஜால் குஜாலாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இவர்கள் விவகாரம் பாலாவுக்கு தெரிய வந்துள்ளது, அனால் மனைவி முத்துமலர் எதையும் மறுக்கவில்லை, எனக்கு பாலா உடன் இணைந்து வாழ விருப்பம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு கணவர் பாலாவை விட்டு பிரிந்து தனியாக இருந்து வந்த முத்துமலர். அடிக்கடி கள்ள காதலனுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் வாரிசு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து செய்தி அனுப்பியது தான் முத்துமலர் மற்றும் அந்த அரசியல் வாரிசும் மீண்டும் நெருக்கமாக காரணம் என கூறப்படுகிறது.

ஒரு நிமிடம் கூட அங்க இருக்க கூடாது..தனுஷிடம் இருந்து மகன்களை பிரித்த ஐஸ்வர்யா.! என்ன நடந்தது தெரியுமா.?