ஏழைகளுக்கு கடவுளாக காட்சி அளிக்கும் இமான்… இவருக்கு துரோகம் செய்ய சிவகார்த்திகேயனுக்கு எப்படி மனம் வந்ததோ.?

0
Follow on Google News

தமிழ் திரையுலகை பொறுத்தவரை, ஒரு சில நடிகர்களுக்கு அவர்களின் படத்தில் பணிபுரியும் கலைஞர்களுடன் நல்ல நட்பு இருக்கும் அந்த நட்பு, அவர்களின் திரை வாழ்க்கை முழுவதும் கூட தொடரும். அப்படி மிகவும் நட்புடன் பழகிய இரண்டு கலைஞர்கள் டி.இமான் மற்றும் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘மனம் கொத்தி பறவை’ படத்திற்காக இசையமைத்திருந்தார் டி.இமான். அடுத்து வெளியான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு டி.இமான் இசையமைப்பாளராக இருந்துள்ளார்.

ஒன்றாக பணிபுரிவதை தாண்டி, இவர்கள் குடும்ப நண்பர்கள் போலவே பழகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து படங்களில் பணிபுரிவதை நிறுத்தி விட்டனர். இதற்கிடையில்தான் 2020ஆம் ஆண்டு டி.இமானின் விவாகரத்து குறித்த செய்தி வெளியானது. இவரது முன்னாள் மனைவியின் பெயர், மோனிகா ரிச்சர்ட். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இசையமைப்பாளர் டி.இமான், 2022ஆம் ஆண்டு அமலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இமான், சமீபத்தில் ஒரு ஊடக சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் “சிவகார்த்திகேயனும் நீங்களும் ஏன் ஒன்றாக இணைந்து படம் நடிப்பதில்லை” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இமான், தனக்கு சிவகார்த்திகேயன் பெரிய துரோகம் செய்து விட்டதாகவும் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து படம் பண்ண முடியாது என்றும் கூறினார். இது குறித்து அவரிடம் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அவர் கூறிய பதிலை தன்னால் கூற முடியாது என்றும் கூறினார் இமான். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர், இது அவரது விவாகரத்து குறித்த விஷயமாக இருக்கும் என்று கருதினர்.

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான்க்கு இவ்வாறு நடந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தமிழன் படத்தின் மூலம் தான் இமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்பு இவர் தில்ரூபா என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

முதல் படத்திலேயே இவர் இசைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதிலும், அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார்.

அவரைத் தொடர்ந்து வைக்கோம் விஜயலட்சுமியை பாட வைத்தார். சமீபத்தில் கூட இவர் மாற்றி திறனாளி சிறுமி சகானாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் இமானை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள். பின் நரிக்குறவர் குடும்பங்களுக்கு இரண்டு லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் உள்ள ஆறு குடும்பங்களுக்கு குடிசை வீடுகள் சீரமைத்தும், மூன்று வீடுகளுக்கு தார்பாய்கள் மற்றும் சீரமைத்தும், இரவு நேர பாடசாலை அமைத்து நோட்டு புத்தகங்கள் வழங்கி இருக்கிறார்.

இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவ யாரும் இல்லாமல் துணையில்லாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு இமான் பண உதவி செய்து ஆறுதலையும் கூறி இருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் கூட விபத்தில் மொத்த குடும்பத்தையும் இழந்த மாணவிக்கு இமான் உதவி செய்திருந்தார்.

இந்த நிலையில் ஏழை சிறுமி ஒருவருக்கு உதவி செய்ய இமான் செய்திருக்கும் கோரிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஏழை சிறுமி தன்னுடைய அப்பாவை குறித்து பாடல் ஒன்றை பாடுகிறார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை பார்த்து இமான் அந்த சிறுமிக்கு உதவி செய்யும் நோக்கில் அவருடைய பெயர், அவருடைய தொடர்பு விபரம் குறித்து கேட்டிருக்கிறார். இதனை பார்த்த பலருமே சிறுமி குறித்து கேட்டும் இமானின் பதிவை வைரலாக்கியும் வருகிறார்கள்.