முகத்துக்கு நேராக பேசிய ஏ.ஆர்.ரகுமான்… சோகத்தில் மணிரத்தினம்.. என்ன இது கேவலமாக இருக்கு…!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம், இவர் இயக்கத்தில் வெளியான தளபதி படம் தான் இளையராஜா கடைசியாக மணிரத்தினம் படத்துக்கு இசை அமைத்த படம். இளையராஜா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமா மணிரத்தினம் அவரை விட்டு வெளியேறினார், அதே போன்று இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து இவர்களும் இளையராஜா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை விட்டு வெளியேறுகிறார்.

மணிரத்தினம், கே.பாலசந்தர் மற்றும் வைரமுத்து இவர்கள் மூவரும் இணைந்து இளையராஜாவுக்கு போட்டியாக ஒரு இசை அமைப்பாளரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைக்க முடிவு செய்து, கே. பாலசந்தர் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில், வைரமுத்து பாடல் வரிகைளில், ரோஜா படத்தில் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானை அறிமுகம் செய்து வைக்கின்றனர், முதல் படமே ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

அடுத்தடுத்த, இயக்குனர்கள் பாரதிராஜா,ஷங்கர் போன்றவர்களின் படங்களில் இசை அமைத்து தொடர் வெற்றியை பெற்றார், ஏ.ஆர்.ரகுமான், தொடர்ந்து மணிரத்தின இயக்கும் அணைத்து படங்களிலும் ஏ.ஆர்.ரகுமான் இடம் பெற்று இருப்பர்.இப்படி மணிரத்தினம் அவர்களால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு வளர்ந்தவர் ஏ.ஆர்.ரகுமான் மிக குறுகிய காலத்தில் இசையில் மிக பெரிய உச்சத்தை தொட்டார்.

மணிரத்தினம் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான கண்ணத்தில் முத்தமிட்டால் படம் தான் கடைசியாக அவர் கொடுத்த வெற்றி, அதன் பின்பு சுமார் 20 வருடங்களில், அவர் இயக்கத்தில் வெளியான அணைத்து படங்களும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை, இதில் சில படங்கள் படுதோல்வியை தழுவியது, இந்த நிலையில் தற்பொழுது இயக்குனர் மணிரத்தினம் எங்கே இருக்கிறார் என்று தேடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் மணிரத்தினத்துக்கு வரவேற்பு இல்லாமல் போனது.

இந்நிலையில் வரலாற்று கதையை மய்யமாக வைத்து பொன்னியின் செல்வன் என்கிற படத்தை தற்பொழுது இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், விக்ரம் பிரபு, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, என்று பல முக்கிய நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர், இந்த படம் மிக பெரிய அளவில் எதிர்பார்க்க படுகிறது, பேன் இந்தியா படம் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

இந்த படத்துக்கான பிண்ணனி இசைக்காக ஏ.ஆர்.ரகுமான் படத்தை பார்த்த போது, என்ன படம் இது, ஏன் இப்படி எடுத்து வைத்துள்ளார் மணிரத்தினம், படமா இது, இதுக்கு இசை அமைக்க மூடே இல்லை என தன்னுடைய உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார் ரகுமான். இந்நிலையில் படத்தின் இசை எப்படி போகிறது என்று பார்க்க வந்துள்ளார் மணிரத்தினம், அப்போது பொன்னியின் செல்வன் படத்துக்கான இசை வேலையை ஏ.ஆர்.ரகுமான் தொடங்காமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார் மணிரத்தினம்.

இது குறித்து ரகுமானிடம் கேட்ட போது, சார் படம் நல்லா இல்லை, எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை என்று மணிரத்தினம் முகத்திற்கு நேராக தெரிவித்துள்ளார் ரகுமான். இதனை தொடர்ந்து ரகுமான் சொன்னதை ஏற்று கொண்டு பொன்னியின் செல்வன் படத்தின் சில காட்சிகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ள மணிரத்தினம் அதற்க்கான படப்பிடிப்பு வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கோபத்தில் அஜித் .. அஜித்தின் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு.! என்ன நடந்தது தெரியுமா.?