விஜய்யை வெச்சு செய்யும் அனிருத்… கொஞ்சம் கூட இறக்கம் இல்லையா.?

0
Follow on Google News

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பான் இந்தியா ஸ்டார்களுடன் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்றனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து திருவிழா போல் கொண்டாடினர்.

அதுமட்டுமின்றி இந்த படமானது நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. அதில் முக்கியமான ஒன்றுதான், யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சண்டை. வாரிசு திரைப்படத்திலிருந்து தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நிறைய பிரபலங்களும், அவருடைய ரசிகர்களும் பேசி வந்தனர். இது மிகப் பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

ஆனால் அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ஜெயிலர் படத்தின் பாடல் அமைந்தது. குறிப்பாக பேர தூக்க நாலு பேரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு.. நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்.. போன்ற வரிகள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கிளம்பிய மொத்த அலப்பறைக்கும் பதில் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.

உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்.. என்ற வரிகள் கடந்த மூன்று தலைமுறைகளாக ரஜினிகாந்த்துக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பையும், இனியும் சூப்பர் ஸ்டார் அவர்தான், இதே போன்ற வரவேற்பு தொடரும் என்று சொல்வது போலவும் அமைந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம காண்டாகினர்.

அதுமட்டுமின்றி இந்த பாடலை இசை அமைத்தது பாடியது தமிழ் சினிமாவின் ‘ராக்ஸ்டார்’ அனிருத் தான். இதனால் அனிருத்துக்கு பல எதிர்ப்புகள் வந்தது. தற்போது விஜயின் லியோ படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். மனதில் பல வன்மம் வைத்துக் கொண்டு எதற்கு விஜய்க்கு இசை அமைக்கிறீர்கள் என்றெல்லாம் கூட பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தை அனிருத் சென்னையின் பிரபல திரையரங்கில் குடும்பத்துடன் படம் பார்த்தார்.

அப்போது ரசிகர்கள் முன்னிலையில் ஹுக்கும் பாடலை பாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். ரசிகர்களும் அவருடன் சேர்ந்து பாடல் பாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அனிருத்தின் மீது மிகவும் கடுப்பாக உள்ளனர்.
அவர்களின் கோபத்திற்கு பெட்ரோல் ஊற்றும் விதமாக, அனிருத்தின் பதிவொன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில், “தலைவர் நிரந்தரம் நெல்சா’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் மூன்று கோப்பைகளையும் அதனுடன் இணைத்துள்ளார். இதுவரை நெல்சன் நான்கு படங்களை இயக்கியுள்ளார். அதில் பீஸ்ட் மட்டுமே தோல்வி படமாக அமைந்தது. கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெய்லர் ஆகிய மூன்று வெற்றி படங்களை குறிக்கும் விதத்திலேயே மூன்று கோப்பைகளை அனிருத் பதிவித்துள்ளார் என்று அவரை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். பீஸ்ட் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.