சிவகார்திகேயன் கனவில் மண்ணை அள்ளி போட்ட ஏ.ஆர்.ரகுமான்… ஏற்கனேவே இமான் மனைவி பிரச்சனை.. இப்ப மொத்தமும் போச்சா..

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நேரம் சரியில்லை போல.. கால் எடுத்து வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியா வெடிக்குது’ அப்படின்னு சொல்ற மாதிரி கடந்த சில மாதங்களாகவே சிவகார்த்திகேயன் பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே இசையமைப்பாளர் இமான் மனைவி விவகாரத்தில் சிக்கி சின்னா பின்னமாகி நொந்து கிடக்கும் சிவகார்த்திகேயன், இப்போது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் செயலால் என்னது செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்.

1992 இல் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம், இசையமைப்பாளராக அவதரித்த ஏ ஆர் ரகுமான், முதல் படத்திலிருந்து தனது முதல் தேசிய விருதை வென்றார். 70 களிலும் 80 களிலும் இளையராஜாவின் இசைக்கு தாளம் போட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் ரகுமானின் இசையை கேட்டு மெய் மறந்து சிலிர்த்துப் போன காலம் அது.

சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இசையமைப்பாளராக பயணித்து வரும் ஏ ஆர் ரகுமான், ஆஸ்கார், ஃபிலிம் ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருது என பல்வேறு விருதுகளை வென்று குவித்துள்ளார். ஏ ஆர் ரகுமான். இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த அளவிற்கு இசை மூலம் ரசிகர்களின் மனதில் வேரூன்றி நின்றுள்ள ஏ ஆர் ரகுமான், அயலான் படத்தின் அயலா அயலா பாடல் வெளியானதில் இருந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

ரவிக்குமார் இயக்கத்தின் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீசாகிறது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் முதல் பாடலான வேற லெவல் சகோ லிரிக் வீடியோ ஏற்கனவே வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இப்படியான நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் ஆன அயல அயலா பாடல் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏ ஆர் ரகுமான் ரசிகர்கள் பலரும், இந்த பாட்டை எல்லாம் ரகுமான் தான் போட்டார் என்று 2கே கிட்சை வேணாம் ஏமாத்தலாம், 90ஸ் கிட்ட ஏமாத்தவே முடியாது. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதே சமயம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள், சிம்புவுக்கு மட்டும் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது!, மறக்குமா நெஞ்சம் என அதிரடி ஹிட் பாடல்களை கொடுத்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இப்படி வெந்தும் வேகாத மாதிரி அரைவேக்காடு பாட்டை போட்டு இருக்கீங்களே என்று ஏ ஆர் ரகுமானை ரவுண்டு கட்டி வருகின்றனர்.

இன்னும் சிலர், அயலான் படத்திற்கு உண்மையில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பாளரா இல்லை அவரது மகன் இசையமைப்பாளரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது …என்று புத்துணர்ச்சியூட்டும் இசை மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரகுமான் அடுத்ததாக போட்ட மானூத்து மந்தையிலே பாட்டு இன்றளவிலும் கிராமங்களில் காதுகுத்து கல்யாண விழாவில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அந்த அளவிற்கு கிராமிய இசை, மேற்கத்திய இசை என எல்லா விதமான வகையிலும் மெட்டு போட்டு ரசிகர்களை தாளம் போட செய்த ஏ ஆர் ரகுமானுக்கு சோதனை காலம் போல தெரிகிறது.