KPY பாலாவுக்கு திருமணம்… உயிருக்கு உயிராக காதலித்த அந்த காதலி யார் தெரியுமா.?

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து வந்த இவர் மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் கொடுத்து விடுவார். அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார்.

அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா செய்யும் காமெடிக்கு அளவே கிடையாது. இவர் புலிக்குத்தி பாண்டி, நாய் சேகர் ரிடர்ன்ஸ், காக்டைல், தும்பா, ஜூங்கா உள்ளிட்ட படங்களிலும் பாலா நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார். சமீபத்தில் கூட இவர் தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். இவருக்கு சின்னத்திரை மூலமாகவும் சினிமா மூலமாகவும் அவர் செய்யும் சமூக சேவை மூலமாகவும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தி குடுப்பது வெண்டிலேட்டர் உட்பட உயிர்காக்கும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ தேவைக்காக மக்கள் பயன்படுத்த ஆட்டோ வழங்குவது என பல சமூக சேவைகளை செய்துவருகிறார் பாலா. பாலா சிறந்த நடிகர், காமெடியன் என்பதை தாண்டி, மனிதநேயம் மிக்கவர் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார்.

சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய குடும்பத்திற்கு சேர்த்து வைப்பவர்கள் மத்தியில், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை, ஏழை எளிய மக்களுக்கு செலவழித்து வருகிறார். இதுவரை மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கிலும், ஆதரவற்றோருக்கு உதவும் நோக்கிலும், ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ள பாலா, மழை வெள்ளம் சென்னை பகுதியை சூழ்ந்த போது , தன் கையில் இருந்த மொத்த பணத்தையும், ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்.

கடந்த ஆண்டு முதல் நடிகர் பாலா, தன்னுடைய சொந்த செலவில் ஏழைகள் மற்றும் முதியோருக்கும் உதவும் விதமாக இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து உதவி வருகிறார். அதன்படி முதலில் அறந்தாங்கியில் முதியோர் இல்லம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, பின்னர் மலை கிராமம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்தார், மூன்றவதாக சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார். பின்னர் வாணியம்பாடி அருகே மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்துகொடுத்து உதவினார்.

இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட பாலாவிடம், புதுச்சேரி 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்தது குறித்து பேசினார். அப்போது குழந்தைகளுக்கு குட் டச் – பேட் டச் சொல்லி கொடுப்பதை விட டோன்ட் டச் என சொல்லி கொடுங்கள். அது தான் இந்த காலத்திற்கு சிறந்தது என்று கூறினார்.

யாரும் எதிர்பாராத விதமாக, அடுத்த மாதம் தனக்கு காதல் திருமணம் நடைபெற உள்ள தகவலை அறிவித்த பாலாவிடம், அங்கிருந்த மாணவர்கள் உங்கள் காதலி யார் என கேட்டபோது… சிரிப்பையே தன்னுடைய பதிலாக அளித்தார். எனினும் விரைவில், பாலா திருமணம் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலா கூறிய இந்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.