வேலை நடக்க வேண்டும் அதற்காக தான் போனார்கள்… வைரமுத்து மீது தவறில்லை… நடிகை பரபரப்பு…

0
Follow on Google News

வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி தெரிவித்து வந்த பாலியல் குற்றசாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சில காலம் அவர் குறித்த அந்த பாலியல் குற்றசாட்டு சற்று அமைதியாகி, வைரமுத்துவும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பழையபடி மேடை பேச்சுக்களை தொடர்ந்தார், இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, மறுப்பக்கம் சமீபத்தில் டெல்லியில் நடந்த மல்யுத்த வீரர்களில் போராட்டத்திற்கு குரல் கொடுத்து இருந்தார் கமல்ஹாசன்,

அதற்கு சின்மயி, தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர், தன்னிடம் அத்துமீறிய பாலியல் குற்றவாளியை வெளிச்சம்போட்டு காட்டியதற்காக 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். அந்த கவிஞர் உங்களுக்கு நெருக்கமானவர் என்பதால் அதைப்பற்றி பேசவில்லை. கண்முன்னே நடக்கு துன்புறுத்தலை புறக்கணித்துவிட்டு பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் அரசியல்வாதியை எப்படி நம்ப முடியும் என வைரமுத்து விவகாரத்தை மீண்டும் கிளறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து டெல்லியில் நடந்த மல்யுத்த வீராங்கனை பாலியல் விவகாரத்திற்கு தமிழக முதல்வர் குரல் கொடுக்க, அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கவிஞர் வைரமுத்து மீது இதுவரை 19 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஒருமுறை கூட அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. அவரும் வைரமுத்து விவகாரத்தை கையில் எடுத்தது , மீண்டும் வைரமுத்து பாலியல் குற்றசாட்டை ஊதி பெரிதாக்கும் வகையில் அமைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கிய பங்களிப்புக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருதுகள், சாகித்ய அகாடமி விருது, கலைஞர் செம்மொழி விருது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருதை பெற்றவர்களுக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் அவர்கள் விரும்பிய இடத்தில் வீடு வழங்கப்படும்” என்றும், அந்த வகையில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரும் வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் வைரமுத்து குறித்த பாலியல் குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வைத்துள்ள பின்னணி பாடகி சின்மயிக்கு ஆதரவாக மற்றொரு பின்னணி பாடகி புவனா சேஷன், தனக்கு நடந்த சம்பவம் குறித்து வெளியிட்டு சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய பின்னணி பாடகி புவனா சேஷன் தனக்கும் வைரமுத்துவுக்கு இடையில் நடந்த சம்பவம் ஒன்றை வெளியிட்டு இந்திய அளவில் வைரமுத்து விவகாரத்தை பேசும் பொருளாக மாற்றியுள்ளார்.

இந்த நிலையில் வைரமுத்து ரசிகர்கள் வைரமுத்துவுக்கு ஆதரவாக இந்த விஷயத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள், அந்த வகையில் பிரபல பழம்பெரும் நடிகை வென்னிற ஆடை நிர்மலா இதற்கு முன்பு வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய வீடியோ ஒன்றை வைரமுத்து ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர், அதில் மீ டூ என்பது என்னை பொருத்தவரை ஒரு கண்ராவியான விஷயம்.

மீ டு குறித்து இன்று பேசுகின்றவர்கள், அன்று என்ன செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஒரு வேலை நடக்க வேண்டும் என்பதற்காக தானே, அவர்கள் போனார்கள். அது ஏன் இப்போது வந்து அந்த மனுஷன் பேரன் பேத்தி எடுத்து, நல்ல அந்தஸ்தில் இருக்கும் பொழுது, என்னுடைய மனது ரொம்ப அறுக்கிறது, துடைக்கிறது, அப்போது அந்த மாதிரி அவர் பண்ணினார் என்று, இப்போது ஏன் வாய் திறக்க வேண்டும் என சரமாரியாக கேள்வி எழுப்பிய நடிகை நிர்மலா.

மேலும் அப்போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள், இவர்கள் ஏன் அங்கே போனார்கள், மீ டு புகாரை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். இவர்களுக்கு ஏதோ ஒரு வேலை நடக்க வேண்டும், அதற்காக செய்துவிட்டு, இப்போது வந்து மீ டு என்று ஒவ்வொருவரும் ஆரம்பித்தார்கள் என்றால், இவ்வளவு நாள் ஏன் அவர்கள் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருந்தார்கள். அவர் ஒரு அந்தஸ்துக்கு வந்த பின்பு ஏதாவது சொல்லி அவர் பெயரை களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காத்திருந்தார்களா.? என வைரமுத்துவுக்கு ஆதரவாக இதற்கு முன்பு நடிகை வென்னிற ஆடை நிர்மலா பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது.