நயன்தாராவாக ஆசைப்பட்டு…. அவமானம் தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்த பரிசு…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நயன்தாராவுக்கு திருமணத்துக்கு பின்பு பட வாய்ப்புகள் மிக பெரிய அளவில் குறைந்தது. திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க திட்டமிட்டிருந்த நயன்தாரா நடிப்பில் திருமணத்திற்கு பின்பு வெளியான படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இதனால் ஏற்கனவே காமிட்டான படங்களில் இருந்தும் வெளியேற்றபட்டார் நயன்தாரா.

இந்த நிலையில் நயன்தாரா இடம் எனக்கு தான், நான் தான் அடுத்த நயன்தாரா என புதியதாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நயன்தாராவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி வந்தார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கிரேட் இந்தியன் கிச்சன் என்கின்ற படம் வெளியாவதற்கு முன்பு அந்த படத்தை விற்பனை செய்யமுடியுமால் தயாரிப்பாளர் படாத பாடு பட்டு வந்தார். அதேபோன்று டிரைவர் ஜமுனா என்கின்ற படமும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் இருந்தது.

ஆனாலும் தான் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், ட்ரைவர் ஜமுனா படங்கள் வெளியான அடுத்து நான் தான் அடுத்த நம்பர் ஒன் நடிகை என்கிற மிதப்பில் இருந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஸிடம் கால் சீட் கேட்டு செல்லும் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் அதிகம் கேட்டு வந்ததால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்கள்.

மேலும் நயன்தாராவை பின்பற்றி தனி கேரவன், உதவியாளர் பவுன்சர் என ஏகப்பட்ட கண்டிஷன் ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டு, இந்த டீல் ஓகே என்றால் கதை கேட்கிறேன் என்றல்லாம் பில்டப் கொடுத்து வந்துள்ளாராம். ஆனால் அவர் நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ட்ரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய இரண்டு படங்களும் மிக பெரிய கேவலமான தோல்வியை சந்தித்தது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா மொத்தம் ஆறு லட்சம் தான் தமிழ்நாட்டின் ஷேர் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது, அதேபோன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான த கிரேட் கிச்சன் என்கின்ற படம் தமிழ்நாட்டு ஷேர் வெறும் ஒன்பது லட்சம் தான் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படத்திற்கு செலவு செய்த போஸ்டர் பணம் கூட தயாரிப்பாளருக்கு கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய ஒரு கேவலமான தோல்வியை சந்தித்து இருந்தது, இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சோலோவாக நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த அனைத்து படங்களுமே தோல்வியை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா இடத்திற்கு ஆசைப்பட்டு தொடர்ந்து, இதுபோன்று நடித்துக் கொண்டிருந்தால் ஒரேடியாக சினிமாவிலேயே நாம் காணாமல் போய்விடுவோம் என உணர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ். சில அதிரடி முடிவுகளை தற்பொழுது எடுத்துள்ளார். அதாவது தான் நடிக்கும் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று பார்க்காமல்.

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட வேண்டும் என்பதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதால். அந்த முன்னணி ஹீரோக்கள் படம் வெற்றி அடையும் போது. அந்த வெற்றியில் தாமும் பங்கு போட்டு கொள்ளலாம். அந்த வகையில் முன்னணி ஹீரோக்கள் மீது சவாரி செய்து அடுத்தடுத்து வெற்றியை பெற்று விட வேண்டும் என முடிவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

இனிமே ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை கைவிட்டு விட்டு தன்னுடைய முடிவில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். மேலும் அடுத்தடுத்து ஹீரோயின் சப்ஜெக்ட் ஓரியன் படங்களில் நடித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தோல்வியை சந்தித்தால் சினிமா துறையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ராசி இல்லாத நடிகை என்கின்ற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவார்கள் என்கின்ற அச்சமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தற்போது வந்துள்ளதால். இனி ஹீரோயின் ஓரியண்ட் படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.