இந்தியா முழுவதும் விவதா பொருளானது வைரமுத்து விவகாரம்… பாடகி சொன்ன பகீர் தகவல் தான் காரணம்…

0
Follow on Google News

மீண்டும் வைரமுத்து குறித்த பாலியல் குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வைத்துள்ள பின்னணி பாடகி சின்மயிக்கு ஆதரவாக மற்றொரு பின்னணி பாடகி புவனா சேஷன், தனக்கு நடந்த சம்பவம் குறித்து வெளியிட்டு சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய பின்னணி பாடகி புவனா சேஷன் தனக்கும் வைரமுத்துவுக்கு இடையில் என்ன நடந்தது என அவர் பேசிகையில்.

1998-ம் ஆண்டு, நான் மிகவும் இளமையாக இருந்த காலம் அது, மேலும் மிகவும் அப்பாவி பெண்ணான நான், பின்னணி பாடகியாக வேண்டும் என பெரும் கனவுகளுடன் அப்போது இருந்தேன். திருச்சியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் ​​ஷோரூம் நிகழ்வில் தான் வைரமுத்துவை சந்தித்தேன்.அப்போது என்னிடம், உனக்கு நல்ல குரல் வளம் உள்ளது, தமிழ் உச்சரிப்பும் சிறப்பாக உள்ளது என தெரிவித்த வைரமுத்து. உங்களை பற்றி இசை அமைப்பாளர் ஏஆர் ரஹ்மானிடம் பேசுகிறேன் என வைரமுத்து தெரிவித்ததாக கூறிய புவனா சேஷன்.

மேலும் அதன் பின்பு வைரமுத்துவிடம் இடம் இருந்து அடிக்கடி தனக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார் புவனா சேஷன். அவருடைய பேச்சுக்கள் மாற தொடங்கியது, ஆனால் நான் அப்பாவியாக இருந்ததால் என்னால் வைரமுத்து பற்றிய அறிந்து கொளவதற்க்கு சில காலம் ஆனது. ஒரு முறை மலேசியாவில் வைரமுத்துவுக்கு வழக்கு இருக்கும் விருது விழாவுக்காக அவர் சென்றார்.

அப்பத்து என்னை தொடர்பு கொண்டு நீங்களும் மலேசியா வருகிறீர்களா.? என்று கேட்டார். நான் அவரிடம், மலேசியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பாட வேண்டுமா.? அல்லது அங்கே நடக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டுமா என கேட்டேன். அதற்கு வைரமுத்து, நீ படுவதையோ அல்லது நீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நான் விரும்பவில்லை, என்னுடன் நீ மலேசியா வரவேண்டும் என விரும்புகிறேன் என வைரமுத்து தன்னிடம் தெரிவித்ததாக கூறிய புவனா சேஷன்.

வைரமுத்து இவ்வாறு பேசிய பின்புதான் என்ன நடக்கிறது என எனக்கு புரிய தொடங்கியது. நான் நீங்கள் பேசுவது எனக்கும் சங்கடமாக இருக்கிறது, நீங்கள் நினைப்பது நடக்காது என வைரமுத்துவிடம் தெரிவித்து விட்டேன். எனது தொழிலுக்காக மற்ற விஷயங்களை சமரசம் செய்வதற்கு நான் விரும்பவில்லை என தெரிவித்த புவனா சேஷன். மேலும் இதற்காக என் படும் தொழிலை விட்டுவிடுகிறேன் என்றால் அதை கூட விட்டுவிடுவேன் என்றும்,

பின்னணி பாடகி சின்மயி 2018ம் ஆண்டு வைரமுத்து குறித்து குற்றசாட்டை முன் வைத்த போது யாரும் நம்பவில்லை, ஏனென்றால் வைரமுத்து மிக பெரியவர், மேலும் சின்மயி – வைரமுத்து இடையில் தனிப்பட்ட பிரச்சனை இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் நான் வைரமுத்து குறித்த வெளிகொண்டதின் நோக்கம் நானும் அதையெல்லாம் கடந்து வந்தேன் என்பதற்காக தான் என பாடகி புவனா சேஷன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது ஆங்கில ஊடகங்களில் வைரமுத்து குறித்து பாலியல் குற்றசாட்டு பெரும் பேசும் பொருளாக இருந்து வந்த நிலையில், இதுவரை வைரமுத்து விவகாரம் தமிழ்நாட்டை தாண்டி பெரிதாக பேசப்படாம இருந்து வந்த நிலையில், தற்பொழுது இந்தியா முழுவது பேசும் பொருளாக மாறியுள்ளது வைரமுத்து குறித்த பாலியல் குற்றசாட்டு விவகாரம்.

இந்நிலையில் இதற்கு முன்பு கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது 2021ஆண்டு வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்த போது, கேரளாவை சேர்த்த நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவுக்கு விருது கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது, பெரும் சர்ச்சையாக வெடித்தது, இதன் பின்பு அந்த விருதை வாங்காமலே, திரும்ப தருகிறேன் என வைரமுத்து அறிவித்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.