திருந்த ஜென்மம்…பெண்களை இழிவு படுத்திய விஜய்யை வெளுத்து வாங்கிய பெண் சிங்கம்…

0
Follow on Google News

தொடர்ந்து நடிகர் விஜய்க்கு எதிராக குரல் கொடுத்து அதில் வெற்றியும் பெற்று வருகின்றவர் சமூக பார்வையாளர் ராஜேஸ்வரி. இந்நிலையில் விஜய் நடிப்பில் லியோ படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், அந்த படத்தில் ட்ரைலர் வெளியாகி மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி கடும் எதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஏற்கனவே லியோ திரைப்படத்தில் இருந்து நான் ரெடி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்று இருந்தாலும், நடிகர் விஜயே பாடியிருந்த இந்தப்பாடலில் புகை மற்றும் மது பழக்க வழக்கங்களை பற்றிய வரிகள் இடம் பெற்று இருந்தன இது கடும் எதிப்புக்கு உள்ளானது. இது தொடர்பாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா,இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் நடிகர் விஜய்யை கைது செய்யக் கோரி புகார் முன்பு மனு ஒன்றை அளித்து இருந்தார்.

விஜய் மீது புகார் தெரிவித்த ராஜேஸ்வரி, விஜய் அவர்களுக்கு சிறுவர்கள் ரசிகர்களாக இருக்கும் பொழுது கூடுதலான தாய் உணர்வு இருக்கத்தான் செய்யும்.. விஜய் சிகரெட் வாயிலே சிகரெட் வைப்பதை பார்த்து ஒரு சிறுவன் இதே மாதிரி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் உங்களால் தடுக்க முடியுமா என ஆவேசப்பட்ட ராஜேஸ்வரி பிரியா, ஒரு பொது தளத்தில் பெண்கள் வருவதற்கு மிகவும் சிரமப்படுவதற்கு காரணம் மோசமான வார்த்தைகள் தான், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல், விஜய் ரசிகர்கள் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசுவதற்கு விஜய் தான் பணம் கொடுத்து தூண்டிவிடுகிறார்.

தன்னை விஜய் ரசிகர்கள் ஆபாச வார்த்தையில் திட்டுவதாக தெரிவித்த ராஜேஸ்வரி, விஜய் ஒரு பணம் படைத்த நடிகர் என்பதை நிரூபிப்பதற்காகசமூக வலைதளத்தில் பல போலி கணக்குகளை தொடங்க வைத்து ஆபாசமான வீடியோக்கள், ஆபாச வசனங்கள், மிக கொச்சையான பதிவுகளை பதிந்து, என்னை அச்சுறுத்த வைக்கிறார் விஜய். இதற்கு காரணம் நடிகர் விஜய் தான் என ஏற்கனவே விஜய் மீது மிக கடுமையான குற்றசாட்டுகளை வைத்திருந்தார் ராஜேஸ்வரி.

இந்நிலையில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடல் குறித்து கடும் எதிப்பு கிளம்பி வந்த நிலையில், அந்தப்படத்தின் பாடல் வரிகளில் சர்ச்சைக்கு உரிய வரிகள் நீக்கப்பட்டு இருப்பதாக பட குழு அறிவித்து மக்கள் மத்தியில் இருந்து எழுந்த கடும் எதிப்புக்கு சரண்டரானது லியோ படக்குழு.

இந்நிலையில் ஏற்கனவே லியோ படத்தில் பாடல் வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது வெளியாகி உள்ள லியோ படத்தின் ட்ரைலர் குறிப்பாக பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா என்பது நல்ல வார்த்தைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும், அதிலும் விஜய்க்கு ;குறிப்பாக சிறுவர்கள் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் அவர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

ஆனால் ட்ரைலரில் மிக கீழ்தரமாக பச்சையாக விஜய் ஆபாச வசனம் பேசுவது ட்ரைலர் பார்த்த பெண்களின் கோபத்துக்கு உள்ளாகி உள்ளது, இது குறித்து சமூக பார்வையாளர் ராஜேஸ்வரி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார், அவர் கூறுகையில், லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? விஜய்யை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் ராஜேஸ்வரி.