எக்கேடு கேட்டு போ… ரவீந்திரனை கழட்டி விட்ட மஹாலக்ஷ்மி… செம்ம ஹாப்பி மூடில் என்ன செய்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். அண்மையில் முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில் யார் கண்ணுபட்டுச்சோ தெரியவில்லை! தற்போது ரவீந்தர் சிறையில் இருக்கிறார். ரவீந்தர் லிப்ரா புரோடக்சன்ஸ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நட்புனா என்னானு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.

இந்நிலையில் தான் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து ரூ.16 கோடி வரை அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ரவீந்தர் சந்திரசேகரை அதிரடியாக கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கைது செய்தனர்.

அதாவது திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இருப்பதாக பாலாஜியிடம், ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் முதலீடு செய்தால் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதை நம்பிய பாலாஜி ரூ.16 கோடியை ரவீந்தர் சந்திரசேகரிடம் வழங்கி உள்ளார். இதையடுத்து ரவீந்தர் சந்திரசேகர் அவரை ஏமாற்றியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவீந்தர் சந்திரசேகர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் ஜாமீன் கோரி ரவீந்தர் சந்திரசேகர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தார். இதையடுத்து ஜாமீன் கோரி ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்தர் தரப்பில் புகார்தாரருக்கு ரூ.2 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.ஆனால் அந்த புகார் அளித்த பாலாஜி இந்த தகவல் முற்றிலும் பொய் என்றும் ரவீந்தர் அப்படி எதுவும் தரவில்லை என்று பதில் அளித்தார் இது அவருக்கு மீண்டும் சிக்கலை கொடுத்துள்ளது. தற்போது உயர்நீதிமன்றம் இந்த வழக்கை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.அதுவரை ரவீந்தர் சந்திரசேகர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

திடீரென ரவீந்தர் சந்திரசேகர் பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சில நாட்கள் சோசியல் மீடியா பக்கம் வராமல் முடங்கிக் கிடந்த மகாலட்சுமி மீண்டும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து டிசைன் டிசைனாக சேலைகளை அணிந்து கொண்டு போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை இன்றும் கருப்பு நிற சேலையை அணிந்து கொண்டு மகாலட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் அதற்கு வழக்கம்போல தத்துவ கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ”You don’t have to prove yourself to anyone” யாருக்காகவும் உங்களை நீங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்ன பதிவிட்டுள்ளார் மகாலட்சுமி. அவரது போஸ்ட்க்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் மோசமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். போட்டோ வேண்டுமென்றால் போட்டுக் கொள்ளுங்கள், தயவுசெய்து இது போன்ற தத்துவங்களை சொல்லி தலைவலி உண்டு பண்ணாதீர்கள் என பங்கம் பண்ணி வருகின்றனர்.