தனுஷ் – ஐஸ்வர்யா வாழ்க்கையில் புகுந்து சடுகுடு விளையாடிய ஜோசியர்.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி நள்ளிரவில் அதிரடியாக அறிவித்து. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இரண்டு குடும்பத்தினர் பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரை இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் பரவிய நிலையில், அதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியானது.

ஐஸ்வர்யா – தனுஷ் இடையில் கடத்த சில வருடங்களாக அடிக்கடி சன்டை நடந்து வந்துள்ளது. இதற்கு காரணம் தனுஷ் சக நடிகைகளிடம் கிசு கிசுவில் சிக்கி வந்தது தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு சினிமாவில் பெரியதாக சாதிக்க வேண்டும் என்கிற நீண்டநாள் ஆசை இருந்து வந்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் அவர் இயக்கத்தில் வெளியான 3 மற்றும் வை ராஜா வை திரைப்படம், இதில் வை ராஜா வை ஓரளவு வெற்றி பெற்றது.

இதன் பின்பு வேலையில்லா பட்டதாரி, பவர் பாண்டி போன்ற படத்தின் கதைகள் ஐஸ்வர்யா உருவாக்கியது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கலாம் என முடிவு செய்த ஐஸ்வர்யா, அவர் தாய் ஆலோசனை படி பிரபல ஜோசியர் ஒருவரை சந்தித்து, குடும்பத்தில் தொடர்ந்து கணவர் தனுஷ் உடன் சண்டை, சினிமாவில் இயக்குனராக ரீ- என்ட்ரி என மனதில் உள்ளதை ஜோசியரிடம் வெளிப்படையாக தெரிவித்த ஐஸ்வர்யா.

இதில் தனது ஜாதகம் எப்படி இருக்கு என கேட்டுள்ளார். அதற்கு சில ஷாக்கான விஷயங்களை ஜோசியர் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா – தனுஷ் இருவருடைய ஜாதகபடி, திருமணம் முடிந்த பத்து வருடங்கள் வரை பெரியதாக பிரட்சனை ஏதும் இருக்காது, அதன் பின்பு சிறு சிறு பிராட்சையாக உருவெடுத்து அடுத்த ஐந்து வருடத்தில் கணவன் – மனைவி இடையே பிரட்சனை பெரியதாக இருக்கும் என ஐஸ்வர்யா வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதை புட்டு புட்டு வைத்துள்ளார் ஜோசியர்.

மேலும் ஐஸ்வர்யா எந்த ஒரு துறையிலும் சாதிக்க வேண்டும் என்றால், அவர் கணவரிடம் இருந்து பிரிந்து செயல்பட்டால் அந்த துறையில் பெரியதாக சாதிக்க முடியும். கணவனை விட்டு பிரிய வேண்டாம் என உறுதியாக இருந்தால், எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற முடியாது, மேலும் கனவன் – மனைவி இடையே இதற்கு முன்பை விட இனிவரும் காலங்களில் மோதல் அதிகரிக்கும், இது இருவருக்கும் மன உளைச்சலை கொடுக்கும் என ஜோசியர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

ஜோசியர் எச்சரித்த அடுத்த சில நாட்களில் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்து இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்த பின்பு, ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இதற்கு சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, நடிகர் ராகவ லவரன்ஸ் நடிப்பில் இயக்குனராக ரீ – என்ட்ரி கொடுக்க உள்ள ஐஸ்வர்யா அந்த படத்துக்கு தேவையான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் இந்தியில் ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், மேலும் ஒரு படம் இந்தியில் ஐஸ்வர்யா இயக்க இருக்கிறார். ஆக மொத்தம், தற்பொழுது தமிழில் ஒரு படம் இந்தியில் இரண்டு படம் என ஐஸ்வர்யா கைவசம் மூன்று படங்கள் உள்ளது, இந்நிலையில் ஜோசியர் சொன்னது போன்று கணவரை விட்டு பிரிந்த பின்பு தனது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்வதை அறிந்த ஐஸ்வர்யா தற்பொழுது அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை அடிக்கடி ஜோசியரை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்கிறார் ஐஸ்வர்யா என்று கூறப்படுகிறது.

அடுத்தவர் கணவரை ஆட்டைய போட்ட பாலா மனைவி முத்துமலரின் தாயார்..! அட கடவுளே… என்ன நடந்தது தெரியுமா.?