நீண்ட கால இழுபறிக்குப் பின் திரையைக் காணும் ஜெயில் திரைப்படம்!

0
Follow on Google News

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஜெயில் திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவரின் ஜெயில் படம் ரிலீஸாவதில் சில சிக்கல்கள் எழுந்தன. ஜி வி பிரகாஷ் குமார் நடித்திருந்தாலும் வியாபாரம் சூடு பிடிக்கவில்லை.

இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக படம் கிடப்பில் கிடந்தது. இதையடுத்து படத்தைப் பற்றிய தகவல்களையும், அப்டேட்களையும் சமூகவலைதளப் பக்கம் மூலமாக வெளியிட்டு கவனத்தை ஈர்த்தார் இயக்குனர் வசந்தபாலன். அதையடுத்து படத்தை முன்னணி விநியோக நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றியது.

இதையடுத்து பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தை திரையரங்க வெளியீடாக டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் இளைஞர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.