சந்தோஷ் நாராயணனை கழட்டிவிட்டு இளையராஜாவோடு கைகோர்க்கிறாரா பா.ரஞ்சித்?

0
Follow on Google News

பா.ரஞ்சித்-சந்தோஷ் நாராயணன் கூட்டணில் வெளிவந்த ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களாக இருவருக்கும் அமைந்தது. இந்த கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி என்றே சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பா.ரஞ்சித், ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், இப்படத்திற்கு வேறொரு இசையமைப்பாளரை தேர்வு செய்ய பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக இப்படத்தில் இளையராஜாவை ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணனுக்கும், பா.ரஞ்சித்தும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே பா.ரஞ்சித் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பா.ரஞ்சித் இயக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.